↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
கமலை தொடர்ந்து நடிகர் ஆதியும் தன் பிறந்த நாளில் தூய்மை இந்தியா திட்டத்தில் இணைந்தார்.
சமீபத்தில் நடிகர் கமல் ஹாசன் தனது பிறந்த நாள் அன்று பிதமர் மோடியின் கனவு திட்டமான தூய்மை இந்தியா திட்டத்தில் இணைந்து சென்னை, கீழ்ப்பாக்கம் அருகே உள்ள மாடம்பாக்கம் ஏரியை தூய்மைப்படுத்தினார். கமலை பின்பற்றி அவருடைய ரசிகர்கள் பலரும் இந்த திட்டத்தில் தங்களை இணைத்துக் கொண்டனர். தற்போது அவரைத் தொடர்ந்து நடிகர் ஆதியும் தன் பிறந்த நாளான நேற்று முன்தினம் தூய்மை இந்தியா திட்டத்தில் இணைந்தார்.
அதிகாலையில் தன் குழுவினர் மற்றும் ரசிகர்களுடன் பெசன்ட் நகர் கடற்கரை சென்ற ஆதி அங்கு குவிந்து கிடந்த குப்பைகள் முழுவதும் அகற்றி சுத்தம் செய்தார். இதில் எக்ஸனோரா அமைப்பையும் இணைத்துக் கொண்டார். காலை நேரத்தில் இந்த தூய்மைப்பணி நடைபெற்றதால் ரசிகர்கள், அருகிலுள்ளவர்கள் மட்டுமல்ல நடைப் பயிற்சி சென்றவர்கள் கூட இதில் ஆர்வமாகப் பங்கேற்றனர். அத்துடன் இந்நாளில் கண்தான விழிப்புணர்வு நிகழ்ச்சியையும் நடத்தினார்.
இது பற்றி நடிகர் ஆதி கூறும்போது “இந்த தூய்மைப் பணியை மக்களிடம் சுத்தம் பற்றிய விழிப்புணர்வு வர வேண்டும் என்பதற்காக செய்தோம். என் பிறந்த நாளில் அதுவும் காலையிலேயே இப்படி தொடங்கியதில் எனக்குப் பெருமையாகவும் திருப்தியாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. “என்கிறார். பிறந்த நாள் விழா என்றால் ரசிகர்களைக் கூச்சல் போடவும் தோரணம் கட்டவும் என்று பயன்படுத்தும் நடிகர்களிடம் ஆதி சமூக நோக்கில் ரசிகர்களைப் பயன்படுத்துவது பாராட்டுக்குரியது.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top