↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
யாராலும் நம்ப முடியாத செய்திதான் இது. காரணம், 24 வருடங்களாக இணை பிரியாத தம்பதிகளாக வாழ்ந்த லிஸியும், பிரியதர்ஷனும் பிரிய முடிவெடுத்து, குடும்பநல கோர்ட்டில் விவாகரத்து கேட்டு மனு செய்துள்ளனர்.
மலையாளம், தமிழ், இந்தி மொழிகளில் சூப்பர் ஹிட் படங்களை கொடுத்தவர் பிரியதர்ஷன், அதேப்போல் தமிழ், மலையாளப் படங்களில் 80களில் கொடிகட்டிப் பறந்தவர் லிஸி. வயது வித்தியாசம் நிறைய இருந்தும், லிஸி பிரிதர்ஷனை தீவிரமாக காதலித்து திருமணம் செய்து கொண்டர். 1990ம் ஆண்டு இவர்கள் திருமணம் நடந்தது. இருவருக்கும் இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
இந்த நிலையில் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு கடந்த சில மாதங்களாக பிரிந்து வாழ்வதாக கூறப்பட்டு வந்தது. ஆனால் இதை இருவரும் ஒருக்கட்டத்தில் மறுத்தனர். ஆனால் அவர்கள் பிரிந்து தான் வாழ்ந்து வந்தனர். இந்நிலையில் இருவரும் விவகாரத்து கேட்டு குடும்பநல கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளனர்.
இதுகுறித்து நடிகை லிஸி கூறியுள்ளதாவது, 24 வருட திருமண வாழ்க்கைக்கு பிறகு நானும், பிரியதர்ஷன் அவர்களும் முழு மனதுடன் பிரிய முடிவெடுத்துள்ளோம் என்பதை வருத்ததுடன் தெரிவித்துக் கொள்கிறோம். எங்கள் பிரிவை சட்டப்பூர்வமாக நடைமுறைப்படுத்த இன்று(டிச.,1ம் தேதி) சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து வேண்டி விண்ணப்பித்துள்ளேன்.
எங்களது இந்த முடிவை எங்களின் குழந்தைகளும், நண்பர்களும் அறிவார்கள். இந்த கடினமான காலத்தில் தாங்கள் அனைவரும் எங்களின் கவலை அறிந்து, எங்களின் தனியுரிமை மதித்து செயல்படமாறு பணி அன்புடன் கேட்டுகொள்கிறேன். இவ்வாறு லிஸி கூறியுள்ளார்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top