↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

கத்தி படம் ரிலீசுக்கு முன்பும் ரிலீசுக்கு பிறகும் பல சர்ச்சைகளில் சிக்கிக் கொண்டிருந்தாலும் சம்பந்தப்பட்டவர்கள் இதுவரை முன்வந்து எந்த விளக்கமும் தரவில்லை. கத்தி படத்தை முடித்துவிட்டு அதில் வெற்றியும் அடைந்து அடுத்த படத்தில் நடிக்க போய்விட்டார் விஜய். விஜய்யின் அடித்த படத்தை தமீம் பிலிம்ஸ் சார்பாக பி.டி.செல்வகுமார் இவர் விஜய்யின் மேனஜர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் விஜய்யின் அப்பாவான எஸ்.ஏ.சியிடம் நீண்ட காலமாக பணிபுரிந்து வருவதால்தான் இந்த அரிய வாய்ப்பை அவருக்கு ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார் விஜய்.
கத்தி படத்திற்கு பிறகு மீண்டும் விஜய் இரட்டை வேடத்தில் இப்படத்தில் நடிக்கிறார். இதில் அப்பா விஜய் கதாபாத்திரத்துக்கு மயிலு ஸ்ரீதேவி நடிக்கவிருக்கிறார். மகன் விஜய் கதாபாத்திரத்துக்கு நடிகை ஸ்ருதிஹாசன் நடிக்கவிருக்கிறார். இப்படத்திற்கு வில்லனாக நான் ஈ புகழ் சுதீப் நடிக்கிறார். மாரீசன் என்று தலைப்பு வைத்திருப்பதாக தகவல்கள் வெளியானாலும் இன்னும் அதிகாரப்பூர்வமாக ஏதும் அறிவிக்கப்படவில்லை. படப்பிடிப்பு இம்மாதத்தின் 2வது வாரத்தில் தொடங்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதற்காக சென்னை ஈசிஆரில் 100 ஏக்கர் பரப்பளவில் பிரம்மாண்டமாக செட் போட்டுவிட்டார் கலை இயக்குநர் முத்துராஜ்.
இப்படத்தை முடித்துவிட்டு ராஜா ராணி படத்தின் இயக்குநர் அட்லீ இயக்கத்தில் ஒரு படம் நடிக்கவுள்ளார் விஜய், இப்படத்திற்கு நயன்தாரா தான் நாயகியாம். அதன்பின் இயக்குநராகவும், தயாரிப்பாளராகவும் நடிகராகவும் வெற்றிப்பாதையில் சென்று கொண்டிருக்கும் சசிக்குமார் இயக்கத்தில் ஒரு முழு நீள ஆக்‌ஷன் கதையில் நடிக்கிறார் விஜய்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top