↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

தமிழ்நாட்டின் மாயவரத்தைச் சேர்ந்த பெண் ப்ரியா ஆனந்த். இவர் தமிழில் பல படங்களில் கமிட்டாகி பிஸியாக நடித்துக் கொண்டு வருகிறார். இதுவரை நடித்த படங்களில் எல்லாம் துள்ளலான நடிப்பால் அனைவரும் கவர்ந்தவர் ப்ரியா ஆனந்த்.

தற்போது முதன் முதலாக ஒரு ஊர்ல ரெண்டு ராஜா படத்தில் கவர்ச்சியாக நடனம் ஆடியிருக்கிறார் என்று தகவல்கள் வந்தன. இந்நிலையில் ப்ரியா ஆனந்த் நான் கவர்ச்சியாக நடனம் ஆடவில்லை என்று பதில் கூறியுள்ளார்.

அவர் கூறியதாவது, அந்த படம் சம்பந்தப்பட்ட ஸ்டில்களை பார்த்து சிலர் நான் கவர்ச்சியாக நடனம் ஆடியிருக்கிறேன் என்று கூறி வருகின்றனர். ஆனால் நான் அப்படத்தில் கவர்ச்சியாக ஆடவில்லை. படத்துக்கு தேவைப்பட்டால் ஆடலாம் என்பதும் என் கருத்து என்று கூறியுள்ளார்.


0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top