↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

இன்றைக்கு வெளியாகி இருக்க வேண்டிய படங்களில் ஒன்று, ஒய்.இந்து தயாரிப்பில் ஜெய் ஆகாஷ் நடித்திருக்கும் ‘காதலுக்குக் கண்ணில்லை’. ஆனால், வெளியாகவில்லை. ஏன் என்பதற்குத் தயாரிப்பு தரப்பில் படத்தின் செய்தித் தொடர்பாளர் மீடியாக்களுக்குத் தந்த விளக்கம் இது…
‘காதலுக்கு கண்ணில்லை’ படத்தின் தியேட்டர் ரிலீசுக்கு தியேட்டர் ‘புக்’ செய்யும் மீடியேட்டராக ‘சிவா’ என்பவரை வேலைக்குச் சேர்த்தாராம் பெண் தயாரிப்பாளரான இந்து.
திடீரென்று கடந்த சில நாட்களாக நடு இரவில் இந்துவுக்கு ‘சிவா’ போன் செய்து ‘பாலியல்’ தொல்லை கொடுக்க, பொறுத்துப்பார்த்த இந்து சிவாவை நேரில் அழைத்துக் கண்டித்ததாராம். அப்பொழுது திடீரென்று இந்துவைக் கட்டிப்பிடித்து முத்தமிட, சிவா முயற்சித்தாராம்.
இதனால் மேலும் கோபம் அடைந்த இந்து, செருப்பால் அடித்து சிவாவை விரட்டியதுடன், தன்னைப் பாதுகாத்துக்கொள்ள நீலாங்கரை காவல் நிலையத்தில் சிவா மீது புகார் (FIR) பதிவு செய்திருக்கிறாராம்.
இதையறிந்த ‘சிவா’ தமிழகம் முழுவதும் இந்தப் படத்துக்கு ‘புக்’ செய்யப்பட்ட தியேட்டர்களுக்கு ஃபோன் செய்து படத்தை இன்று 31-10-2014 ரிலீஸ் செய்ய விடாமல் தடுத்து தலைமறைவாகி விட்டாராம்.
இது தொடர்பாக, தயாரிப்பாளர் சங்கம் மற்றும் மீடியேட்டர் சங்கத்திலும் ‘சிவா’ மீது தயாரிப்பாளர் இந்து புகார் செய்திருக்கிறாராம்.


அதிர்ச்சியளிக்கும் இந்த சம்பவம் குறித்து அவர்கள் குறிப்பிடும் சிவா என்கிற நபர் வெளியே வந்து உண்மையை சொல்வாரா, அல்லது காவல்துறை மற்றும் தயாரிப்பாளர் சங்கம், மீடியேட்டர்கள் சங்கம் என்ன செய்யப் போகிறது என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்..!

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top