↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

சூர்யா நடிப்பில் சமீப காலமாக வெளிவரும் ஆக்ஷன் கதைகள் எல்லாம் எதிர்பார்த்த வெற்றி தராததால் மீண்டும் ஜில்லுனு ஒரு காதல் படத்தில் நடித்ததை போல் ரொமான்டிக்கிற்கு மாற போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
கார்த்தியை வைத்து ரஞ்சித் இயக்கிய மெட்ராஸ் படம் தன்னை வெகுவாக கவர்ந்து விட்டதாக கூறிய சூர்யா, ரஞ்சித்துடன் ஒரு படம் பண்ண வேண்டும் என முடிவு செய்து, அவருடன் ஒப்பந்தமும் போட்டு விட்டாராம்.
தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் தான் நடித்து வரும் மாஸ் படத்திற்கு பிறகு விக்ரம் குமாரின் படத்திலும், பின்னர் ஹரி இயக்கத்தில் ஒரு படத்திலும் நடித்த பிறகு ரஞ்சித் இயக்கத்தில் ஒரு அழகான காதல் கதையில் நடிக்க உள்ளாராம் சூர்யா.
தனது நடிப்பில் சமீபத்தில் வெளியான ஆக்ஷன் படங்கள் இவருக்கு கைக்கொடுக்காததால் தான் சூர்யா காதல் கதையில் நடிக்க முடிவு செய்ததாக கோலிவுட்டில் கிசுகிசுக்கப்படுகிறது.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top