↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

சூர்யா, ஜோதிகா திருமணம் நடந்த பிறகு ஜோதிகா முழுவதுமாக நடிப்புக்கு ஓய்வு கொடுத்து விட்டு குடும்பத்தை கவனிப்பதில் கவனம் செலுத்தி வந்தார். சமீபத்தில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிய ‘ஹவ் ஓல்ட் ஆர் யூ’ படத்தின் தமிழ் உரிமையை சூர்யா ஆரம்பித்துள்ள 2டி நிறுவனம் தான் தயாரிக்கவுள்ளது.
அதுமட்டுமில்லாமல் எட்டு ஆண்டுகளுக்கு பிறகு ஜோதிகா அந்த படத்தில் நடிக்க இருந்தார், அதற்கு சூர்யாவும் ஒப்புதல் தெரிவித்திருந்தார். தற்போது அதில் ஜோதிகாவுக்கு திடீர் மனகுழப்பம் ஏற்பட்டுள்ளது காரணம் ‘ஹவ் ஓல்ட் ஆர் யூ’ படத்தின் கதைப்படி திருமணமாகி ஒற்றுமையாக இருந்த கணவன், மனைவிக்கு இடையே திடீர் கருத்துவேறுபாடு ஏற்பட்டு பிரிந்து செல்வது போன்ற கதையம்சம் என்பதால் தான் அந்த குழப்பம்.
மேலும் இந்த படத்தில் நடித்த பிறகு ஒற்றுமையாக இருந்த மஞ்சுவாரியர் – திலீப் ஜோடி திடீரென விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தை அணுகியுள்ளது. இந்த செயலும் அவருக்கு குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த இரண்டு செயல்களும் ஜோதிகா மனதை உருத்துவதால் எங்கு நமக்கும் இது போல் நடந்துவிடுமோ என்ற அச்சம் ஏற்பட்ட காரணத்தால், படத்தை தயாரிக்க மட்டும் செய்வோம் எனக்கு பதிலாக நயன்தாராவை ஒப்பந்தம் செய்து அந்த கதாபாத்திரத்தில் நடிக்க வைக்கலாம் என்ற முடிவு எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top