↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

யான் படத்திற்குப் பிறகு ஜீவா புதுப்படம் ஒன்றில் நடிக்கவிருக்கிறார். இப்படத்தை ராம்நாத் இயக்குகிறார். இவர் கருணாசை வைத்து ‘அம்பாசமுத்திரம் அம்பானி’ என்னும் படத்தை இயக்கியவர். இப்படம் காமெடி படமாக உருவாகியிருந்தது.

தற்போது ஜீவாவை வைத்து இயக்கவிருக்கும் படத்தில் ஜீவாவிற்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கவுள்ளதாக செய்திகள் வந்திருக்கின்றன. இதற்குமுன் ஜீவாவுடன் நயன்தாரா ‘ஈ’ படத்தில் நடித்திருந்தார். இப்படத்தை ஜனநாதன் இயக்கியிருந்தார். அப்படத்திற்குப் பிறகு ஆர்யா-நயன்தாரா ஜோடியாக நடித்த ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’ படத்தில் ஜீவா சிறப்புத் தோற்றத்தில் நடித்திருந்தார். 

தற்போது அப்படத்திற்குப் பிறகு மீண்டும் இணைகிறார்கள். இப்படம் காமெடி கலந்த ரொமன்டிக் படமாக உருவாக உள்ளது. இன்னும் பெயரிடப்படாத இப்படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் மாதம் துவங்கவிருக்கிறது. இதில் ‘சிவா மனசுல சக்தி’ படத்தில் நடித்ததைப் போல, சாதாரண லோக்கல் இளைஞனாக ஜீவா நடிக்கவுள்ளார்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top