↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

அஜீத் ஜோடியாக நடிக்க ஆசைதான் ஆனால் சான்ஸ் வரலையே' என ஏக்கமாக கூறினார் ஹன்சிகா.கவுதம் மேனன் இயக்கும் ‘என்னை அறிந்தால்' படத்தில் நடித்து வரும் அஜீத் அடுத்து சிறுத்தை சிவா இயக்கும் புதிய படத்தில் நடிக்க உள்ளார். ஏற்கனவே சிவா இயக்கிய சிறுத்தை படத்தில் தமன்னா ஹீரோயினாக நடித்திருந்ததால் அவரே இப்படத்திலும் ஹீரோயினாக நடிப்பார் அல்லது ஹன்சிகா நடிப்பார் என கூறப்பட்டது. பிறகு ஹன்சிகா நடிக்க உள்ளதாகவும் தகவல் வெளியானது.

இதுபற்றி ஹன்சிகா தரப் பில் விசாரித்தபோது,‘இதுபற்றி பட தரப்பிலிருந்து இதுவரை யாரும் ஹன்சிகாவிடம் பேசவில்லை. அஜீத்துடன் நடிப்பது எல்லா ஹீரோயின்களுக்கும் விருப்பமான ஒன்றுதான். ஹன்சிகாவுக்கும் அந்த ஆசை இருக்கிறது. ஆனால் சிவா இயக்கும் படத்தில் அந்த வாய்ப்பு அமையவில்லை. விஜய் இயக்கத்தில் சிம்புதேவன் இயக்கும் படம், சுந்தர்.சி.இயக்கத்தில் விஷால் நடிக்கும் ‘ஆம்பள', ஜெயம் ரவியுடன் ரோமியோ ஜூலியட் ஆகிய படங்களில் தற்போது ஹன்சிகா நடித்து வருகிறார். விஜய் பட ஷூட்டிங்கில் விரைவில் ஹன்சிகா பங்கேற்க உள்ளார். இதுவரை ஏற்காத கதாபாத்திரத்தில் அதாவது இளவரசி கதாபாத்திரத்தில் அவர் நடிக்க உள்ளார்' என்றனர். 

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top