↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad இந்த ஆண்டு வெளியான திரைப்படங்களில் மிகப்பெரிய வெற்றி பெற்ற படங்களில் ஒன்று விஜய்யின் கத்தி. இந்த படத்தின் வெற்றி விழா பல்வேறு இடங்களில் விஜய் ரசிகர்களால் நடத்தப்பட்டு வருகின்றது. இந்நிலையில் ‘கத்தி’ படத்தின் 52 வது நாள் விழாவை திருநெல்வேலி விஜய் ரசிகர்கள் மிகவும் பிரமாண்டமாக நடத்த முடிவு செய்துள்ளனர்.

இந்த விழாவுக்கு விஜய் மற்றும் ஏ.ஆர்.முருகதாஸ் வருகை தர ஒப்புக்கொண்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. திருநெல்வேலிக்கு வருகை தர இருக்கும் விஜய்க்கு பிரமாண்ட வரவேற்பு கொடுக்க விஜய் ரசிகர்கள் முடிவு செய்துள்ளனர்(
அடுத்த பட தயாரிப்பாளரின் பணத்திலோ?). இந்த விழா வரும் டிசம்பர் 14ஆம் தேதி நடைபெற உள்ளது. விழா நடைபெறும் இடம் இன்னும் முடிவு செய்யப்படவில்லை என கூறப்படுகிறது.

திருநெல்வேலி, தூத்துக்குடி, மற்றும் கன்னியாகுமரி பகுதியை சேர்ந்த விஜய் ரசிகர்கள் இந்த விழாவில் திரளாக வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. நீண்ட இடைவெளிக்கு பின்னர் திருநெல்வேலியில் விஜய் கலந்து கொள்ள இருக்கும் விழா இது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த விழாவில் விஜய் தனது எதிர்கால திட்டம் குறித்த அறிவிப்பு ஏதேனும் வெளியிடுவார்? எனவே இந்த வெற்றி விழாவை அரசியல் மாநாடு போன்று நடத்த ஏற்பாடு செய்துள்ளோம், என விழா ஏற்பாட்டாளர்கள் தரப்பில் இருந்து தகவல்கள் வந்துள்ளது.



0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top