↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad



ஒரு கல் ஒரு கண்ணாடி, இது கதிர்வேலன் காதல் ஆகிய படங்களில் ஹீரோவாக ஜொலித்த உதயநிதி, தற்போது நயன்தாராவுடன் 'நண்பேண்டா' என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படம் விரைவில் ரிலீஸாகவுள்ள நிலையில் அவர் ஹீரோவாக நடிக்கும் அடுத்த திரைப்படம் நாளை முதல் படப்பிடிப்பு தொடங்கவிருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளன.

உதயநிதி ஸ்டாலினுடன் முதல்முறையாக 'ஐ' நாயகி எமிஜாக்சன் ஜோடிசேரவுள்ள இந்த படத்தை இயக்குனர் திருக்குமரன் இயக்கவுள்ளார். இவர் ஏற்கனவே சிவகார்த்திகேயன், ஹன்சிகா நடித்த 'மான் கராத்தே' படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. உதயநிதியின் ரெட்ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் தயாரிக்கவிருக்கும் இந்த படத்திற்கு டி.இமான் இசையமைக்கவுள்ளார். இந்த படத்திற்கு இன்னும் டைட்டில் வைக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் உதயநிதி 'என்றென்றும் புன்னகை' இயக்குனர் அகமது இயக்கத்தில் 'இதயம் முரளி' என்ற படத்திலும் நடிக்கவுள்ளார். இந்த படத்தின் ஆரம்பகட்ட வேலைகள் நடைபெற்று வருவதாகவும், விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பும் தொடங்கும் என்றும் கூறப்படுகிறது. ஒரே நேரத்தில் உதயநிதி இரண்டு படங்களில் முதன்முதலாக நடிக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top