↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad பிரித்தானியாவில் 5 வயது சிறுவன் ஒருவன் தன் பள்ளித் தோழனின் பிறந்த நாள் விழாவுக்கு வராததால், அவனுக்கு தோழனின் தாய் அபராத நோட்டீசை அனுப்பியுள்ளார்.
பிரித்தானியாவின் கார்ன்வால்(Cornwall) பகுதியில் தனது பெற்றோருடன் அலெக்ஸ் நாஷ்(Alex Nash Age-5) என்ற சிறுவன் வசித்து வருகிறான்.
இவனது பள்ளித் தோழனின் பிறந்த நாள் கொண்டாட்டங்கள் சமீபத்தில் நடைபெற்றுள்ளது.
இதில் பங்கேற்க கோரி அலெக்சுக்கு, அவனது தோழனின் தாய் ஜூலி லாரன்ஸ்(Julie Lawrence) அழைப்பிதழ் அனுப்பியுள்ளார்.
ஆனால் அவனால் அந்த விழாவுக்கு வரமுடியவில்லை, எனவே தங்களுக்கு ஏற்பட்ட நஷ்டத்தை சரிகட்டும் வகையில் 15.95 பவுண்ட்ஸ்களை திரும்பத்தர வேண்டும் என்று ஜூலி லாரன்ஸ், நஷ்ட ஈடு கோரி கடிதம் ஒன்றை ஆசிரியரின் வாயிலாக அலெக்ஸிற்கு அனுப்பியுள்ளார்.
இதுகுறித்து ஜூலி கூறுகையில், பிறந்தாள் விழாவுக்கு வர முடியாது என்றால் முன்கூட்டியே சொல்ல வேண்டும் என தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் அலெக்ஸ் பிறந்தநாளின் போது தனது தாத்தா பாட்டியுடன் அன்றைய தினத்தைக் கழித்ததால், விழாவைத் தவிர்த்தாக கூறப்படுகிறது.
மேலும் இப்பணத்தை தரவிட்டால் அலெக்ஸ் குடும்பத்தின் மீது வழக்கு தொடரப்படும் என ஜூலி கூறியுள்ளார். இதற்கு அலெக்ஸின் தந்தை கடும் எதிர்ப்பை தெரிவித்துடன், தங்களால் பணம் ஒன்றும் கொடுக்க முடியாது என திட்டவட்டமாய் கூறியுள்ளார்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top