↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் முயல்கள் போன்று அதிக குழந்தைகள் பெற்றுக் கொள்ளத் தேவையில்லை என போப் பிரான்சிஸ் தெரிவித்துள்ளார்.
பிரான்சிஸ் போப் ஆண்டவராக பொறுப்பேற்றதில் இருந்து பல புதிய எண்ணங்களை வெளியிட்டு வாடிகன் வழக்கத்தை மாற்றி வருகிறார். மேலும் ஏழைகளின் நலனை கருத்தில் கொண்டு செயல்படும் அவர், பிற மதத்தினரையும் சந்தித்து உரையாடி மகிழ்கிறார்.
இந்நிலையில் பிலிப்பைன்ஸ் நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு வாடிகன் திரும்பிய போப் பிரான்சில் செய்தியாளர்களிடம் பேசுகையில், நல்ல கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் முயல்களை போன்று குழந்தைகள் பெறத் தேவையில்லை.
7 குழந்தைகளை பெற்ற தாய் ஒருவர் 8வது முறையாக கர்ப்பமாக இருந்தார். அவரிடம் உங்களின் 7 குழந்தைகளையும் அனாதையாக விட்டுச் செல்ல விரும்புகிறீர்களா என்று கேட்டேன்.
அதற்கு அவரோ எனக்கு கடவுள் மீது நம்பிக்கை உள்ளது என கூறியுள்ளார். சிலர் நல்ல கத்தோலிக்கர்களாக இருக்க வேண்டுமானால் அவர்கள் முயல்களை போன்று இருக்க வேண்டும் என நினைக்கிறார்கள்.
புதிய உயிரை உருவாக்குவது திருமணத்தின் ஒரு பங்கு ஆகும். அதற்காக கிறிஸ்தவர்கள் வரிசையாக குழந்தைகள் பெற்றுக் கொள்ள வேண்டும் என்பது இல்லை என பேசியுள்ளார்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top