↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
ஒரு மாதத்துக்குள் வீட்டில் கழிவறை கட்டவில்லை என்றால் விவாகரத்து செய்து விடுவதாக மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த பெண், தனது கணவருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலம், பீட் மாவட்டம், பாங்கிரி கிராமத்தை சேர்ந்தவர் சந்தோஷ். இவரது மனைவி வந்தனா. இவர்களுக்கு திருமணமாகி 17 ஆண்டுகள் ஆகின்றன.
இவர்கள் வீட்டில் கழிவறை கிடையாது. கழிவறை கட்டுமாறு சந்தோஷிடம் பலமுறை கூறியுள்ளார் வந்தனா. ஆனாலும் அவர் கழிவறை கட்டாமல் காலம் தாழ்த்தி வந்தார்.
இதனால் ஆத்திரமடைந்த வந்தனா, கணவர் சந்தோஷுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். ஒரு மாதத்துக்குள் வீட்டில் கழிவறை கட்டவில்லை என்றால் விவாகரத்து செய்து விடுவதாக தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, வந்தனா கூறியதாவதுஹ, வீட்டில் கழிவறை இல்லாததால் நானும், எனது மகளும் மிகவும் சிரமத்துக்கு ஆளாகி வருகிறோம். கழிவறை கட்டித்தருமாறு கணவரிடம் பலமுறை கூறியும் அவர் கண்டுகொள்ளவில்லை.
சமீபத்தில் விவசாய நிலத்தில் மோட்டார் வைப்பதற்கான அறை ஒன்றை எனது கணவர் கட்டியுள்ளார். ஆனால் கழிவறை கட்ட எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் காலம் தாழ்த்தி வருகிறார்.
எனவே, ஒரு மாதத்துக்குள் கழிவறை கட்டப்படவில்லை என்றால் விவாகரத்து செய்ய உள்ளதாக அவரிடம் தெரிவித்துள்ளேன். இதுதொடர்பாக கணவருக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளேன் என்று கூறியுள்ளார்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top