↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
மலேசியாவில் வாழும் தமிழ்த் தம்பதிக்குள் ஏற்பட்ட மோதலில், மனைவியின் கை கால்களை வெட்டிய கணவர், விஷம் குடித்துத் தூக்கில் தொங்கியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மலேசியாவின் ஜோஹார் மாகாணத்தில் வாழ்ந்து வரும் மேனகா கடந்த 15 வருடமாக சிங்கப்பூரில் ஒரு நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.
இவரது கணவர் வேலைக்கு செல்லாமல் இருப்பதால் இவர் தான் குடும்பத்தை பார்த்து கொள்கிறார். மாதம் ஒருமுறை மலேசியா வந்து கணவர், குழந்தைகள், மாமியார் ஆகியோரைப் பார்த்துச் செல்வார்.

சமீப காலமாக மேனகாவின் நடத்தை குறித்து சந்தேகம் அடைந்த அவரது கணவர், மேனகா நன்றாக வேலை பார்த்து சம்பாதிப்பதும், தான் வேலையில்லாமல் இருப்பதையும் நினைத்தும் விரக்தி அடைந்துள்ளார். இந்த விரக்தி மற்றும் கோபத்தில் மனைவியின் கைகளையும் கால்களையும் கொடூரமாக வெட்டிவிட்டு விஷம் குடித்து விட்டு தூக்கிலும் தொங்கியுள்ளார்.

தற்போது மேனகா என்சே பேசர் ஹஜ்ஜா கல்சம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மேனகா தற்போது நலமாக இருப்பதாகவும், அவரது உயிருக்கு ஆபத்து இல்லை என்றும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

இந்தத் தம்பதிக்கு 19 மற்றும் 10 வயதில் இரு மகள்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், மேனகாவின் அண்ணன் ரவிச்சந்திரன் கூறுகையில், தற்போது இரு குழந்தைகளும் எங்களது உறவினர் ஒருவரின் பாதுகாப்பில் உள்ளனர் என்றும் எனது தங்கைக்கு நினைவு இன்னும் திரும்பவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top