↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad வேம்பு இலை மூலிகைகளில் பெரும் சக்தி படைத்ததாக சிறந்து விளங்குகிறது.
பராசக்தி மூலிகை, அரிட்டம், துத்தை, நிம்பம். பாரிபத்திரம், பிதமந்தம், வாதாளி போன்றவை வேம்பு இலையின் மற்ற பெயர்கள் ஆகும்.
இதன் இலை,பூ, பழம், விதை, பட்டை மற்றும் எண்ணெய் முதலியவை பயன்படுகிறது.
வேம்பின் மகத்துவங்கள்
வேப்பங்கொழுந்தும் அதிமதுரப்பொடியும் சமன் சேர்த்து நீர் விட்டு அரைத்துப் பட்டாணி அளவாய் மாத்திரை செய்து நிழலில் உலர்த்தி நாள் தோறும் 3 வேளை ஓரிரு மாத்திரை கொடுத்து வர அம்மை நோய் தணியும்.
வேம்பு இலையை அரைத்துக் தேய்தால் உடல் அரிப்பு, ஆறாத ரணம், கட்டி, வீக்கம் ஆகிய பிரச்சனைகள் தீரும்.
வேப்பங்கொழுந்து 20 கிராம், ஈர்க்கு 10, 4 கடுக்காய் தோல், பிரண்டைச் சாறு விட்டரைத்து அரை அவுன்ஸ் விளக்கெண்ணெய் கலந்து கொடுக்கக் குடல் பூச்சி வெளியாகும்.
வேப்பம் குச்சியால் தொடர்ந்து பல துலக்கி வந்தால் வாய் துர்நாற்றம் போகும், பற்கள் உறுதியாகும்.
5 கிராம் உலர்ந்த பழைய வேம்புப் பூவை 50 மி.லி. குடிநீர் விட்டு மூடி வைத்திருந்து வடிகட்டிச் சாப்பிட்டு வரப் பசியின்மை, உடல் தளர்ச்சி நீங்கும். கல்லீரலை நன்கு இயக்குவிக்கும்.
வேப்பம்பழ சர்பத் குடித்து வந்தால் உடலில் சொறி, சிரங்கு போன்றவை குணமாகும்.
வேப்பம் பூவில் துவையல், ரசம் குமட்டல், வாந்தி மயக்கம் குணமாகும்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top