↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
சுரேந்திரன் இயக்கத்தில் விஜயகாந்தின் மகன் சண்முகபாண்டியன் , நேஹா  நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் படம் ‘சகாப்தம்’. 

இந்த படத்திற்காக சமீபத்தில் மலேசியாவில் உள்ள பினாங் என்ற இடத்தில் பெரும் செலவில் மிக பிரமாண்டமாக போட் சேஸிங் காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளது.

இதில் சண்முகபாண்டியன் 50 அடியாட்களுடன் 15 போட்டுகளில் இருநூறு துணை நடிகர்களோடு சேர்ந்து நடுக்கடலில் சண்டைக் காட்சியில் தூள்கிளப்பி இருக்கிறார். இந்த காட்சி ஹெலிகாப்டர் கொண்டு பிரம்மாண்டமாக படமாக்கப்பட்டுள்ளது. 



இந்த சண்டைக்காட்சி மொத்தம் நான்கு நாட்கள் நடைபெற்றது. அந்த சண்டைக் காட்சியை தாய்லாந்தை சேர்ந்த பிரபல ஸ்டன்ட் மாஸ்டர் கேச்சா அமைத்துள்ளார்.

கேச்சா  ‘பில்லா-2’, ‘துப்பாக்கி’, ’ஆரம்பம்’ ,’முப்பொழுதும் உன் கற்பனைகள்’ போன்ற படங்களுக்கு சண்டைக்காட்சிகள் அமைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top