↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad பிரித்தானியாவில் பெண் ஒருவர் தன் குழந்தைகளை விட்டுவிட்டு, கள்ளக்காதலனுடன் உல்லாச பயணம் மேற்கொள்ள இருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரித்தானியாவின் பிர்மிங்காம்(Birmingam) மாகாணத்தில் பெண் ஒருவர் தனது 2 ஆண் குழந்தைகள் மற்றும் 4 பெண் குழந்தைகளுடன் வசித்து வருகிறார்.
தற்போது கர்ப்பமாக இருக்கும் அப்பெண்ணுக்கு, சமூக வலைதளம் ஒன்றின் மூலம் நபர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
நாளடைவில் இவர்களது பழக்கம் காதலாக மாறியதால், அந்த நபர் அவுஸ்திரேலியா தலைநகர் சிட்னியின்(Sydney) சன்ஷைன்(Sunshine) பகுதியில் 6 வாரங்கள் உல்லாச பயணம் மேற்கொள்ள இவரை வருமாறு அழைத்துள்ளார்
மேலும் அவரை நிர்பந்தித்து பயணச்சீட்டும் பதிவு செய்துள்ளார், இதற்கு முதலில் அப்பெண் மறுப்பு தெரிவித்துள்ளார்.
பிறகு நபரின் ஆசைக்கு இணங்கி ஷாப்பிங் செல்வதாக குழந்தைகளிடம் பொய் கூறிவிட்டு, ஹீத்ரூ(Heathrow) விமான நிலையத்திற்கு சென்றுள்ளார்.
இந்நிலையில் தங்களது தாய் வெகு நேரம் வீடு திரும்பாததால் தவித்த குழந்தைகள், அவர்களது தாத்த- பாட்டியை தொடர்பு கொண்டு விடயத்தை கூறியுள்ளனர்.
இதனையடுத்து அவர்கள் பொலிசாரிடம் புகார் அளித்துள்ளனர். தீவிர தேடுதல் வேட்டை நடத்திய பொலிசார் குழந்தைகளின் தாயை விமான நிலையத்தில் அவரது கள்ளக் காதலனுடன் சுற்றிவளைத்துள்ளனர்.
இதன்பிறகு கைது செய்யப்பட்ட இவர் மீது, வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர்.
இவ்வழக்கை விசாரித்த நீதிபதி, இவருக்கு 6 மாத சிறைத் தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளார்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top