↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

சூர்யா நடிப்பில் வெளியான அஞ்சான் படத்தின் தோல்வி பற்றிய கமெண்டுகள் சமூக வலைதளங்களில் இன்னும் ஓய்ந்த பாடில்லை.

இந்நிலையில் அந்த படத்தில் நடித்த சமந்தா மறைமுகமாக தாக்கியது கோலிவுட் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவர் சமீபத்தில் ஐதராபாத்தில் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
நான் நடித்த சில படங்கள் தோல்வியும், பல படங்கள் வெற்றியும் பெற்றுள்ளன. வெற்றி, தோல்வி என இரண்டையும் நான் ஒரே மாதிரியாகத்தான் பார்ப்பேன். எனவே என்னை பொறுத்தவரை நான் நடித்த படம் நன்றாக ஓடாவிட்டாலும் தனிப்பட்ட முறையில் என் நடிப்பு பாராட்டப்பட்டால் அதை வெற்றிப்படமாகத்தான் என்னுடைய கணக்கில் சேர்த்துக்கொள்வேன்.

படங்கள் தோல்வி அடைந்தாலும் வெற்றி பெற்றாலும் அதன் முழு பொறுப்பும் தயாரிப்பாளரைத்தான் சாரும். அவர் தேர்வு செய்த கதையும் டைரக்டரும் சரி இல்லாததால் படங்கள் தோற்றன என்றுதான் எடுத்துக் கொள்ள வேண்டும்.

சமந்தாவின் இந்த கருத்து சூர்யாவையும் லிங்குசாமியையும் மறைமுகமாக தாக்குவதுபோல் உள்ளது என சமூக வலைத்தளங்களில் பலர் சமந்தாவுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top