↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

ஜோதி லட்சுமி வாழ்க்கை கதையில் நடிக்கவில்லை என்று கூறும் சார்மி அவரைப்போல் நடனம் ஆட பழகி வருகிறார். சில்க் ஸ்மிதா கதையை மையமாக வைத்து தமிழ், இந்தி, கன்னடத்தில் படங்கள் உருவாகின. அதை எதிர்த்து மகளிர் அமைப்பினர் வழக்கு தொடுத்தனர். அதுபோல் கன்னட நடிகை கல்பனா வாழ்க்கையை மையமாக வைத்து கன்னடத்தில் ‘அபிநேத்ரி‘ என்ற பெயரில் பூஜா காந்தி படம் தயாரித்துள்ளார்.
அதை எதிர்த்து கல்பனா குடும்பத்தினர் வழக்கு தொடர்ந்தனர். பழம்பெரும் கவர்ச்சி நடிகை ஜோதிலட்சுமி வாழ்க்கையை மையமாக வைத்து டோலிவுட்டில் படம் உருவாகிறது. அதில் சார்மி ஹீரோயினாக நடிக்கிறார் என்று தகவல் வெளியானது. இதற்கு ஜோதிலட்சுமியிடம் அனுமதி பெறப்பட்டதா என்று சம்பந்தப்பட்ட பட தயாரிப்பாளரிடம் கேட்டபோது பதில் அளிக்கவில்லை.
தற்போது சார்மி பதில் அளித்திருக்கிறார். ‘ஜோதிலட்சுமி வாழ்க்கைக்கும் இக்கதைக்கும் சம்பந்தம் இல்லை. பொழுதுபோக்கை மையமாக வைத்து புரி ஜெகநாத் இக்கதையை எழுதி இருக்கிறார். என்னுடைய பழைய போட்டோக்களை காட்டி அந்தளவுக்கு ஒல்லியாக மாற வேண்டும் என்று இயக்குனர் கூறினார். அதேசமயம் கிளப் டான்ஸ், இடுப்பை சுழற்றி ஆடும் பெல்லி டான்ஸ் ஆடவும் பயிற்சி எடுத்துவருகிறேன்‘ என்றார் சார்மி. கிளப் டான்ஸ், பெல்லி நடனம் ஆடுவதில் ஜோதி லட்சுமி பிரபலம் என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top