↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad


சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா சிறைக்குச் சென்றபோது தமிழ்த் திரையுலகத்தினர் உண்ணாவிரதம் இருந்ததும் 'தெய்வத்தை மனிதன் தண்டிக்கலாமா?’ என்று சிரிப்பு பேனர் வைத்ததும் நாம் அறிந்த கதைதான். ஆனால் ஷகிலாவும் அ.தி.மு.க ஆதரவாளர் ஆகிவிட்டார் என்பது ஆச்சர்யம்தான்.
ஜெயலலிதா ஜாமீனில் வெளிவந்ததற்காக ஏர்வாடி தர்ஹாவில் அன்னதானம் வழங்கிக் கொண்டாடியிருக்கிறார் ஷகீலா. தர்ஹாவில் உள்ள நோயாளிகளுக்கும் அங்குவரும் பக்தர்களுக்கும் கடந்த 15 நாட்களாக அன்னதானம் செய்துவருகிறார். ஷகிலாவின் இந்த அரசியல் ப்ளஸ் ஆன்மிகச் சேவையில் அ.தி.மு.கவைச் சேர்ந்தவர்களும் பங்குபெற்று உற்சாகமாகப் பணியாற்றிக்கொண்டிருக்கிறார்கள். 'என்ன ஆச்சு ஷகிலாவுக்கு?’ கேட்டால்...

''பெங்களூரு சிறையில் அம்மா அடைபட்டபோது அவர்களுக்கு நேர்ந்த சிரமத்தை எண்ணி மனம் வருந்தினேன். அதற்காக ஏர்வாடி தர்ஹாவில் அடக்கமாகியிருக்கும் ஆண்டவரிடம் பிரார்த்தனை செய்தேன். நான் நினைத்த காரியம் சீக்கிரமே நடந்ததால் எனது வேண்டுதலை நிவர்த்தி செய்யும் விதமாக அன்னதானம் வழங்கி வருகிறேன்''.

''அப்போ நீங்க அ.தி.மு.கவா?''
''நான் கட்சியில் இல்லை. ஆனால் எனக்கு சின்ன வயதில் இருந்தே எம்.ஜி.ஆரையும் அம்மாவையும் பிடிக்கும்.  நீண்டநாட்களாக நான் அம்மா அபிமானி. ஒரு பொண்ணா, தனியா இருந்து தைரியமா பல விஷயங்களைச் சந்திச்சுருக்காங்க. அரசியலில் எத்தனையோ எதிரிகளைச் சந்திச்சு வெற்றி கண்டிருக்காங்க. மக்களுக்காக தன்னோட வாழ்க்கையையே அர்ப்பணிச்சு, பல நல்ல காரியங்களைச் செஞ்சிருக்காங்க.''

''அ.தி.மு.கவில் சேரும் ஐடியா இருக்கா?''
''நிச்சயம் இருக்கு. நான் மட்டுமில்ல. என்னோட 15க்கும் மேற்பட்ட நடிகைங்க அம்மா கட்சியில சேர ரெடியா இருக்காங்க. அதற்கான அழைப்பு அம்மாகிட்ட இருந்து வரும்னு காத்திருக்கோம்.''

''அ.தி.மு.கவுக்கு ஆதரவாக தேர்தல் பிரசாரம் செய்யப் போவீங்களா?''
''ஏற்கெனவே சிலர் பிரசாரம் செய்யக் கூப்பிட்டாங்க. ஆனால் காசு வாங்கிட்டுப் பிரசாரத்துக்கு போக எனக்கு சம்மதமில்லை. இப்போ அம்மாவுக்காக பிரசாரம் செய்யத் தயாராயிட்டேன்.''

''சினிமா வாய்ப்பு இல்லாததால அரசியலுக்கு வந்துட்டீங்களா?''
''யார் சொன்னது? என் கைவசம் 10 படங்கள் இருக்கு. புது டைரக்டர் ரவிக்குமாரோட 'உண்மை’ படத்தில் அரசியல்வாதியாகவே நடிக்கிறேன். அது என்னோட கேரியரை இன்னும் உயர்த்தும்.''

''திருமணம் செய்துகொள்ளும் எண்ணம் இருக்கா?''
''கல்யாணம் செஞ்சு என்னங்க சாதிக்கப் போறோம். அம்மாவைப் பாருங்க மேரேஜ் செஞ்சுக்காமலே தைரியமா வாழலையா? யாருமே செய்ய முடியாத சாதனைகளை செஞ்சு காமிக்கலையா, அவங்களோட தைரியத்தை வழிகாட்டுதலா எடுத்துகிட்டு இப்படியே இருந்துடலாம்னு நினைக்கிறேன்.''
ஆகவே மக்களே, கூடிய விரைவில் ரத்தத்தின் ரத்தங்கள் மேடையில் ஷகிலாவைக் காணலாம்!

...............................................................................................................
எமது தளத்தின் மூலம் சினிமா, அரசியல் மற்றும் இதர செய்திகளை உடனடியாக தெரிந்துகொள்வதற்கு இந்த page ஐ like செய்யுங்கள் நண்பர்களே!!!

https://www.facebook.com/pages/Tamil-Excellent-News/920381617976801

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top