↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

உடலுறவு. இந்த வார்த்தையை சும்மா உச்சரித்தாலே அனைவரின் புருவமும் உயரும். இதனைப் பற்றி வெளிப்படையாக பேசுவது என்பது கற்பனைக்கு எட்டாத ஒன்றாக விளங்குகிறது. வெளிப்படையாக பார்த்தால், இது நடைமுறையில் ஒருமுக்கியமான அங்கமாக விளங்கும் விஷயமே.
ஆனாலும் கூட இதில் பெருமளவுஎதிர்மறைகள் அடங்கியுள்ளது. ஒரு குடும்பத்திற்குள் இதனை கண்டிப்பாகஉச்சரிக்கவே கூடாது. பொது இடத்தில் உடலுறவை பற்றி வெளிப்படையாக பேசுவதுபெருமளவில் எதிர்க்கப்படுகிறது. அதுவும் திருமணத்திற்கு முன் உடலுறவு கொள்ளுதல் என்றால் கேட்கவே வேண்டாம், அனைத்து திசைகளில் இருந்தும் எதிர்ப்புகள் ஏற்படும்.
நீங்க கொடுக்கும் முத்தம் சும்மா ‘நச்’சுன்னு இருக்க வேண்டுமா?…
திருமணத்திற்கு முன் உடலுறவு கொள்வது இந்த சமுதாயத்தில் அதிமாக நடக்கும்ஒன்றே. ஆனாலும் கூட அது ஏற்றுக்கொள்ளப்படாத ஒன்றே. திருமணம் என்று வந்துவிட்டால், திருமணத்திற்கு முன் உடல் ரீதியான உறவு கூடவே கூடாது என்றுசத்தியம் எடுப்பது எழுதப்படாத விதி.
ஆனால் திருமணம் எனும் பந்தத்திற்குள்நுழைய, வெறும் சாஸ்திர சம்பிரதாயங்களுக்காக மட்டுமே எடுக்கப்படும் சத்தியமாகவே அது பார்க்கப்படுகிறது.
அவைகளை கடைப்பிடித்தால் தானே இந்த சமுதாயத்தில் ஒரு ஆணும் பெண்ணும் கணவன் மனைவியாக அதிகாரப்பூர்வமாக வாழ்க்கையை தொடங்க முடியும்.
முத்தம் கொடுக்கும் இடங்களும்… அதற்கான அர்த்தங்களும்….
ஆனால் ஏன் இப்படி என்று எப்போதாவது வியந்திருக்கிறீர்களா? உச்சரிக்க கூடகட்டுப்பாடு இருக்கும் வார்த்தையான உடலுறவில் ஏன் ஆணும் பெண்ணும்திருமணத்திற்கு முன் ஈடுபட கூடாது? இரண்டு பேரும் மனது ஒத்து போய் உடலுறவுகொள்ள விருப்பப்படும் போது அதனை ஏன் சமுதாயம் எதிர்க்கிறது?
பழங்கால விதிமுறை…
பழங்காலம் முதலே விதிமுறைகளை விதித்து அதற்கேற்ப அதனை பின்பற்றி வாழ்ந்துவரும் சமுதாயம் இது. அதை செய்ததற்கு முக்கிய காரணம் சமுதாயம் என்பது ஒருஅறநெறியுடன் விளங்குவதற்காக தான்.
இருப்பினும் இன்றைய காலகட்டத்தில்சமுதாயத்தில் பெருமளவு மாற்றம் ஏற்பட்டு வருகிறது. அதுவும் திருமணத்திற்குமுன் உடலுறவில் ஈடுபடுவது தொடர்பான செயல்முறையில், சமுதாயத்தின் எண்ணம்மாறிக் கொண்டே வருகிறது.
திருமணத்திற்கு முன் தன் வருங்கால கணவன் அல்லதுமனைவியுடன் உடல் ரீதியான உறவை வைத்துக் கொள்வதில் இன்றைய தலைமுறை மிகவும்வெளிப்படையாக உள்ளனர்.
திருமணத்திற்கு முன் உடலுறவு வைத்துக் கொள்வது சரியா?….
பெருமளவு, இந்த கேள்விக்கு பதில், சம்பந்தப்பட்ட ஜோடிகளை பொறுத்தே அமையும்.இதற்கு பதிலை முழுமையாக “ஆம்” அல்லது “இல்லை” என கூறி விட முடியாது.
அதேபோல், இந்த எண்ணத்தை நல்லதாகவோ அல்லது கெட்டதாகவோ பார்க்கவும் முடியாது. அதற்கு ஆதரவாகவும் பேசலாம் அல்லது எதிர்த்தும் பேசலாம். அதில் இருக்கும் நேர்மறையான சில விஷயங்களைப் பற்றி பார்க்கலாம்.
புரிதலை வளர்த்துக் கொள்ளுதல்….
செக்ஸ் போன்ற ஒரு விஷயத்தை ரகசியமாக தான் பேச வேண்டியிருக்கிறது. நீங்கள்ஒருவரோடு எவ்வளவு நெருக்கமாக பழகினாலும் சரி, இந்த விஷயத்தை பற்றிபேசுவதற்கு முன் நூறு தடவையாவது யோசிப்போம்.
அப்படிப்பட்ட சூழ்நிலையில், உங்கள் காதலன் அல்லது காதலியுடன் இதனை பற்றி பேச ஆரம்பித்து விட்டால் அதுஉங்களுக்கு பெரிய பயனாக இருக்கும்.
திருமணத்திற்கு முன்பு உடலுறவில்ஈடுபடும் முடிவை நீங்கள் எடுத்து விட்டால், கண்டிப்பாக உங்கள் உறவுஆழமாகும்.
திருமணத்திற்கு முன்பான உடலுறவை பற்றி நாம் பேசுவது என்றால், அதற்கு பிறகு அவரை திருமணம் செய்வது என்ற அடிப்படையில் தான். அதை விட்டுவிட்டு வெறும் பொழுதுபோக்கு சந்தோஷத்திற்காக ஈடுபடும் உடலுறவை பற்றியதுஅல்ல.
இணையும் தன்மை சோதனை…
ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் பாலின விருப்பங்கள் அடங்கியிருக்கும். இதுஒத்துக்கொள்ள வேண்டிய விஷயம்; அதனை மறுக்க முடியாது. இரண்டு பேரும் உடல்ரீதியான உறவில் ஈடுபட முடிவெடுக்கும் போது, அது உடல் ரீதியான சுகத்தைஅளிப்பதோடு மட்டுமல்லாமல், ஒருவர் மீது மற்றவரின் இணையும் தன்மையை சோதிப்பதற்கும் உதவும்.
உடலுறவில் திருப்தி ஏற்படாமல் போவதால் பலதிருமணங்கள் தோல்வியில் முடியும் உதாரணங்கள் பல உள்ளது. கணவன் அல்லதுமனைவியுடன் உடலுறவில் ஈடுபடுவதை பற்றி திருமண அறிவுரையில் எதுவும் கூறப்படுவதில்லை.
ஆனால் அது இருவருக்கும் உள்ள புரிதலை பொறுத்தே அமையும்.உங்களுக்கான சரியான ஜோடியை நீங்கள் கண்டுபிடித்து விட்டீர்கள் என்பதைநீங்கள் உணர்ந்து விட்டால், கண்டிப்பாக சரியான பாதையில் நடைப்போட தயாராகிவிடுவீர்கள்.
நடுக்கங்களை கடந்து வருதல்…
முதல் முறை உடலறுவு என்றால் பலவித உணர்ச்சிகளுடன் கூடிய நடுக்கங்கள்ஏற்படுவது இயல்பான ஒன்றே. திருமணத்திற்கு முன் உங்கள் வருங்கால கணவன் அல்லது மனைவியுடன் நீங்கள் உடலுறவில் ஈடுபடுவதால் இந்த நடுக்கங்களை கடந்து வரலாம்.
திருமணம் ஆவதற்குள் ஒருவரை ஒருவர் நன்றாக புரிந்து கொண்டும் விடுவீர்கள். அதன் பின் இருக்கும் திருமண வாழ்க்கையை சந்தோஷமாக கழிப்பீர்கள்.
பாதுகாப்பு அவசியம்…
காலப்போக்கில் திருமணத்திற்கு முன் கொள்ளும் உடலுறவை பற்றிய எண்ணங்கள் மாறிவந்தாலும் கூட, அதனை முழுமையாக ஏற்றுக்கொள்ள இன்னும் காலம் பிடிக்கும்.
இரண்டு பேரும் மனம் ஒத்து அதில் ஈடுபடும் போது, அதனை செய்வதில் எந்தவொரு தவறும் இல்லை.
ஆனால் அதற்கு முன் போதிய பாதுகாப்பை எடுப்பதற்கு மறந்துவிடாதீர்கள். பொறுப்பாக செயல்பட்டு சிறப்பான வாழ்க்கையை வாழ்ந்திடுங்கள்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top