↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad


இந்தியில் முன்னணி நடிகையாகத் திகழ்ந்து, தமிழில் வாரணம் ஆயிரம், அசல், வெடி, வேட்டை போன்ற படங்களில் நடித்த சமீரா ரெட்டி கர்ப்பமாக உள்ளார். கடந்த ஜனவரி மாதம் டெல்லியைச் சேர்ந்த தொழிலதிபர் அக்ஷய் வர்தேவை மணந்தார் சமீரா.
திருமணத்துக்குப் பின் பார்ட்டி விழாக்களில் தொடர்ந்து பங்கேற்று வந்தார். ராஜபக்சே மகன் டெல்லிக்கு வந்திருந்தபோது, அவருடன் சமீரா மிக நெருக்கமாக இருந்த படங்கள் வெளியாகி பரபரப்பு கிளம்பியது நினைவிருக்கலாம்.
இந்த நிலையில் அவர் கர்ப்பமடைந்துள்ளார். இதனை சமீராவும் சமூக வலைத் தளத்தில் உறுதிப்படுத்தியுள்ளார். தங்கள் முதல் வாரிசை ஆவலுடன் வரவேற்கக் காத்திருப்பதாகக் கூறியுள்ள சமீரா, இந்த தாய்மை தனக்கு கடவுள் கொடுத்த வரம் என்று கூறியுள்ளார்.
சினிமாவிலிருந்து தான் முழுமையாக ஒதுங்கி விட்டதாகவும், இனி நடிக்கும் எண்ணம் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

.......................................
எமது தளத்தின் மூலம் சினிமா, அரசியல் மற்றும் இதர செய்திகளை உடனடியாக தெரிந்துகொள்வதற்கு இந்த page ஐ like செய்யுங்கள் நண்பர்களே!!!

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top