↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

ஆரண்ய காண்டம், கோச்சடையான் உள்பட பல திரைப்படங்களில் நடித்த பாலிவுட் முன்னணி நடிகர் ஜாக்கி ஷெராப். இவருடைய மனைவி ஆயிஷா ஷெராப் (Ayesha Shroff ) நேற்று பத்திரிகையாளரை சந்தித்து தனது தொழில் பார்ட்னர் தன்னிடமிருந்து கோடிக்கணக்கான ரூபாயை முறைகேடு செய்து ஏமாற்றிவிட்டதாக திடுக்கிடும் புகார் ஒன்றை கூறியுள்ளார்.

தனது தொழில் பார்ட்னராக இருந்த சாஹில்கான் என்பவர் தன்னுடைய முதலீட்டில் சுமார் ஐந்து கோடி ரூபாய் வரை மோசடி செய்ததாக அவர் சமீபத்தில் காவல்துறையினர்களிடம் புகார் செய்துள்ளார். இந்த புகாரை விசாரணை செய்வதாக காவல்துறையினர் ஆயிஷா ஷெராபிடம் உறுதியளித்துள்ளனர். மோசடி செய்யப்பட்டதாக கூறப்பட்டுள்ள சாஹில்கான் அவர்கள் பாலிவுட்டில் பிரபல நடிகர் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 1978ஆம் ஆண்டு ஜாக்கி ஷெராபை திருமணம் செய்துகொண்ட ஆயிஷா ஷெராப்புக்கு டைகர் ஷெராப், கிருஷ்ணா ஷெராப் ஆகிய இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top