அஜீத், ஆர்யா, நயன்தாரா, டாப்சி நடித்த ஆரம்பம் படத்தில் ஒரே ஒரு பாட்டுக்கு குத்து நடனம் ஆடிய நடிகை அக்ஷராவின் புகைப்படங்களை ஆபாச படங்களோடு ஒட்டி மார்பிங் செய்து இணையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் இதுகுறித்து தீவிர நடவடிக்கை எடுக்கும்படியும் அக்ஷரா போலீஸில் புகார் கொடுத்துள்ளார்.
நேற்று சைபர் க்ரைம் போலீஸில் புகார் கொடுத்துள்ள நடிகை அக்ஷரா, பிகினியில் இருப்பது போன்ற ஒருசில ஆபாச படங்களுடன் தன்னுடைய தலையை மட்டும் ஒட்டி மார்பிங் செய்துள்ளதாகவும், இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களிலும், ஒருசில இணையதளங்களில் வெளியாகியுள்ளதாகவும், இதுகுறித்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் தனது புகார் மனுவில் கூறியுள்ளார்.
மேலும் தனது பெயரில் ஃபேஸ்புக் மற்றும் டுவிட்டரில் போலி அக்கவுண்டுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், தனது பெயரில் சமூக வலைத்தளத்தில் எவ்வித அக்கவுண்ட்களும் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
தற்போது இந்தி படங்களில் மட்டுமே நடித்துக்கொண்டிருக்கும் அக்ஷரா கடந்த சில மாதங்களாக சென்னைக்கு வரவில்லையாம். இந்நிலையில் ஒருசில இணையதளங்கள் அவர் சென்னையில் படப்பிடிப்பில் கலந்து கொண்டார் என்ற பொய்யான செய்தியை போட்டிருப்பதாகவும் அவர் ஊடகங்கள் மீது புகார் கூறியுள்ளார்.
...............................................................................................................
எமது தளத்தின் மூலம் சினிமா, அரசியல் மற்றும் இதர செய்திகளை உடனடியாக தெரிந்துகொள்வதற்கு இந்த page ஐ like செய்யுங்கள் நண்பர்களே!!!
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.