↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad


நடிகர், நடிகைகள் தங்கள் ரசிகர்களுடன் தொடர்பு கொள்ள இணையதள பக்கங்கள் எவ்வளவு வசதியாக உள்ளதோ அதே அளவுக்கு டார்ச்சரும் தருகின்றன. சமீபத்தில் நடிகை வசுந்தராவின் ஆபாச படங்கள் வெளியாகி அவருக்கு தலைவலி கொடுத்தது. அதேபோல் நடிகை அபர்ணா நாயரின் மார்பிங் படங்கள் பரபரப்பை ஏற்படுத்தின. சில மாதங்களுக்கு முன் கோலிவுட் காமெடி நடிகர் சூரி பெயரில் யாரோ ஒருவர் ரஜினியை பற்றி விமர்சித்து கருத்து வெளியிட்டார். 

அப்படியொரு சமூகவலைதள பக்கம் எனக்கு இல்லவே இல்லை என்று கூறியதுடன் போலீசிலும் சூரி புகார் செய்தார். இதேபோல் மோகன்லால் பெயரில் சிலர் நெட் பக்கம் தொடங்கி இருக்கின்றனர். இதுபற்றி மோகன்லால் சார்பில் அவரது சமூகவலைதள பக்க இன்சார்ஜ் சஜிவ் சோமன் கூறியது:மோகன்லால் சார்பில் 3 நாட்களுக்கு முன் போலீசில் ஒரு புகார் தரப்பட்டது. மோகன்லால் பெயரில் சிலர் போலியான கணக்குகளை இணைய தளத்தில் தொடங்கி குறும்புசெய்து வருகின்றனர். 

மோகன்லால் மற்றும் அவரது குடும்பத்தினர் பற்றி தரக்குறைவாக விமர்சனம் செய்கின்றனர். அந்த பக்கம் முடக்கப்பட்டது. இனிமேல் அவரைப்பற்றியோ அவரது குடும்பத்தினர் பற்றியோ தவறான தகவல் பரப்பக்கூடாது என்று எச்சரிக்கிறோம். அவரைபற்றி விமர்சனம் வெளியிடுவதற்கு முன் ஒருமுறைக்கு 2 முறை சிந்தியுங்கள். மோகன்லால் பெயரிலான போலி இணைய தளத்தை முடக்கியதோடு மட்டுமல்ல விரைவில் அதை பயன்படுத்திய நபரை போலீசார் கைது செய்வார்கள்.

 வேறு யாராவது இதுபோல் தவறாக பயன்படுத்தினால் அவர்களும் சட்ட நடவடிக்கைக்கு உள்ளாவார்கள்.இவ்வாறு சஜிவ் சோமன் கூறினார்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top