
விஜய் தற்போது சிம்புதேவன் இயக்கத்தில் புலி படத்தில் நடித்து வருகிறார். இப்படம் முடிந்த கையோடு அடுத்து அட்லீ இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க சம்மதித்துள்ளார்.
ராஜா ராணி படத்தில் பணிபுரிந்த அதே டெக்னிஷியன்கள் தான் இந்த படத்திலும் பணிபுரிய உள்ளார்கள். இப்படத்தின் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் சமீபத்தில் ஒரு பேட்டியில் பல ருசிகர தகவல்களை கூறியுள்ளார்.
இதில் ‘இப்படம் எங்களுக்கு மிகவும் முக்கியமான படம், இந்த படத்தில் 2 காதல் பாடல்கள் உள்ளது. அப்பாடல்கள் கண்டிப்பாக ரசிகர்களை கவர்ந்து இழுக்கும், மேலும், விஜய் படத்திற்கு தேவையான அத்தனை அம்சங்களும் இப்படத்தில் உள்ளது. இதற்காக படக்குழு இரவு, பகல் பாராமல் உழைத்து வருகிறது’ என கூறியுள்ளார்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.