
ஐ.எஸ். தீவிரவாதிகள் ஈராக்கின் வடக்கு பகுதியான மொசூல், ஹவிஜா மற்றும் திர்குக் உள்ளிட்ட நகரங்களை கைப்பற்றினர்.
மொசூல், சிஞ்சர் மலை பகுதிகளில் ஆயிரக்கணக்கான யாஷிடி பழங்குடியின மக்களை சிறைப்பிடித்தனர், அவர்களில் பெண்களும், குழந்தைகளும் அடங்குவர்.
இந்நிலையில் யாஷிடி பழங்குடியினத்தை சேர்ந்த 350 பேரை சமீபத்தில் ஐ.எஸ். தீவிரவாதிகள் விடுதலை செய்தனர். அவர்களில் பலரது உடல்நிலை மோசம் அடைந்துள்ளது, பலர் மனநோயால் பாதிக்கபட்டுள்ளனர்.
அவர்களை தீவிரவாதிகள் விடுதலை செய்தது ஏன்? என தெரியவில்லை. இன்னும் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்களும், குழந்தைகளும் தீவிரவாதிகள் பிடியில் சிக்கி உள்ளனர்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.