↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad உலகக்கிண்ண போட்டியில் இந்தியா, தென்ஆப்பிரிக்கா அணிகள் அவுஸ்திரேலியாவுக்கு  மிகப்பெரிய சவாலாக இருக்கும் என முன்னாள் அணித்தலைவர் இயன் சேப்பல் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் தகவல் வெளியிடுகையில்,
சொந்த மண்ணில் விளையாடுவதால் அவுஸ்திரேலியா எல்லா வகையிலும் மேன்மையானதாக இருக்கிறது. ஆனால் இந்தியா பலம் வாய்ந்த துடுப்பாட்ட வரிசையை கொண்டது.
தென் ஆப்பிரிக்கா அணி அனைத்து வகையிலும் சிறந்தது. இதனால் இந்த இரு அணிகளும் அவுஸ்திரேலியாவுக்கு கடும் சவாலாக விளங்கும்.
மேலும் அனைவருக்கும் அதிர்ச்சி அளிக்கக் கூடிய அணியாக நியூசிலாந்து உள்ளது. அந்த அணியின் அணித்தலைவர் மேக்குல்லம் ஆக்ரோஷம் நிறைந்தவர்.
உலகக்கிண்ண போட்டிக்கான அவுஸ்திரேலிய அணி தெரிவு சில கேள்விகளை எழுப்பி உள்ளது. மிகப் பெரிய போட்டிக்கு எலக்ஸ் பின்னரை தெரிவு செய்யாதது தவறான முடிவாகும்.
சுமித்தை துணை தலைவராக நியமிக்காததும் சரியான முடிவு அல்ல.
மேலும் காலக்கெடுவுக்குள் கிளார்க் உடல் தகுதி பெறுவது கடினம் என்று தெரிவித்துள்ளார்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top