↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad


வளர்ந்து வரும் நடிகை இனியா தற்போது ஹீரோயின் வாய்ப்பு இல்லாமல் வில்லியாக நடித்து வருகிறார். ஒரு ஊர்ல ரெண்டு ராஜா 
படத்தில் ஒரு பாட்டுக்கு ஆடினார். அந்த பாட்டு ஹிட்டாகவே அதேமாதிரி ஒரு பாட்டுக்கு ஆட வந்த பல வாய்ப்புகளை தவிர்த்து விட்டார். 

இதுபற்றி இனியா கூறியதாவது: இந்திப் படங்களில் ஹீரோயினாக நடிப்பவர் ஒரு பாட்டுக்கு ஆடவும் செய்வார். அங்கே அதனை சகஜமாக எடுத்துக் கொள்வார்கள். ஒரு பாட்டுக்கு ஆட அழைப்பது அங்கு அந்த நடிகைக்கு கொடுக்கப்படும் சிறப்பு அங்கீகாரம. ஆனால் இங்கு அப்படியில்லை. மார்க்கெட் இழந்த நடிகைகள்தான் ஒரு பாட்டுக்கு ஆடுவார்கள் என்று நினைக்கிறார்கள். அதனால்தான் ஒரு பாட்டுக்கு ஆடுவதில்லை என்று முடிவு செய்திருக்கிறேன்.

ஒரு ஊர்ல ரெண்டு ராஜா படத்தில் மட்டும்தான் ஆடியிருக்கிறேன். என்னோட பெஸ்ட் பிரண்ட் மற்றும் குரு பிருந்தா மாஸ்டர் கேட்டுக்கிட்டதாலும் இன்னொரு பிரண்ட் லட்சுமிமேனன் பாடினதாலும் அந்த பாட்டுக்கு ஆட ஒப்புக் கொண்டேன். அதற்கு பிறகு நிறைய வாய்ப்புகள் வந்தது. நல்ல சம்பளத்துடன் வந்தது. ஆனால் ஒப்புக் கொள்ளவில்லை. எந்தப் படத்திலும் நான் வில்லியாக நடிக்கவில்லை. நெகட்டிவ் கேரக்டர்களில்தான் நடிக்கிறேன். அதற்கும் விமர்சனம் வந்தால் அதையும் விட்டுவிட்டு ஹீரோயினாகத்தான் நடிப்பேன். என்கிறார் இனியா.


..........................................................................................................
எமது தளத்தின் மூலம் சினிமா, அரசியல் மற்றும் இதர செய்திகளை உடனடியாக தெரிந்துகொள்வதற்கு இந்த page ஐ like செய்யுங்கள் நண்பர்களே!!!

0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top