↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad நடிகை ஐஸ்வர்யாராயுடன் நடிக்க வேண்டும் என்பது இநதியா முழுவதிலும் உள்ள ஹீரோக்களுக்கு கனவாக உள்ளது. அந்த 
வகையில் பல ஹீரோக்களின் ஐஸ்வர்யாராய் கனவு இன்னும் கனவாகவேதான் உள்ளது. ரஜினிக்குகூட எந்திரன் படத்தில்தான் அது நனவானது. இப்போது அவர் குழந்தை பெற்று மறுபடியும் நடிக்க வந்திருப்பதால் சில ஹீரோக்கள் ஐஸ்வர்யாராயுடன் நடிக்க வேண்டும் என்ற தங்களது ஆசையை வெளிப்படுத்தி வருகின்றனர்.

இப்படி இளவட்ட ஹீரோக்கள் சொல்லிவரும் நிலையில், நடிகர் சீனிவாசனும் அவர்களுடன் தன்னையும் இணைத்துக்கொண்டு எனது கனவு ஹீரோயினி ஐஸ்வர்யாராய்தான். அவருடன் நடிக்க வேண்டும் என்பது எனது பெரிய கனவாக உள்ளது என்று கூறுகிறார்.

நேற்று காலை சென்னை ஏவிஎம் ஸ்டுடியோவில் நடைபெற்ற நோ என்ற படத்தின் பூஜைக்கு வந்திருந்தபோது மீடியாக்கள் கேட்டபோதுதான் இப்படி சொன்னார் சீனிவாசன். அவரிடத்தில், ஐஸ்வர்யாராயுடன் உங்களை இணைக்க எந்த டைரக்டர்களும் முன்வராதபட்சத்தில் அவரை வைத்து நீங்களே சொந்த படம் எடுப்பீர்களா? என்று கேட்டதற்கு, ஏற்கனவே படம் தயாரித்து சினிமாவில் கோடிக்கணக்கில் நான் விட்டிருக்கிறேன்.

அதனால், சொந்த படம் எடுக்கும் அளவுக்கு என்னிடம் பணம் இல்லை. நான் சினிமாவில் விட்ட பணத்தையே இன்னும் எடுக்க முடியாமல் இருக்கிறேன் என்று சொன்ன பவர்ஸ்டார், எனது கனவு யார் மூலமாவது கண்டிப்பாக ஒருநாள் கைகூடும். அந்த நம்பிக்கை மட்டும் நூறு சதவிகிதம் எனக்கு உள்ளது என்று அடித்து சொன்னார்.



0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top