↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
அர்ஜுனனின் அம்பெய்யும் வேகத்தை எடுத்ததும் தெரியாது தொடுத்ததும் தெரியாது என்பார்கள். மணிரத்னம் தனது படத்தை தொடங்கியதும், இறுதிகட்டத்துக்கு வந்திருப்பதும் ஏறக்குறைய அதேவேகத்தை ஒத்திருக்கிறது.
 
துல்கர் சல்மான், நித்யா மேனன், பிரகாஷ்ராஜ், கனிகா நடித்திருக்கும் மணிரத்னத்தின் புதிய படம் அலைபாயுதே போன்று நகரத்து காதல் கதை. வழக்கம் போல் போஸ்டர், பூஜை எதுவுமின்றி படத்தை தொடங்கியவர் மிகவிரைவிலேயே இறுகட்டத்துக்கு வந்துள்ளார். படத்தின் கடைசி ஷெட்யூல்ட் ஷுட்டிங் நடந்து வருவதாக படத்தின் கேமராமேன் பி.சி.ஸ்ரீராம் தனது ட்விட்டர் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
 
ரஹ்மான் இசையமைக்க, வைரமுத்து பாடல்கள் எழுதியிருக்கும் இந்தப் படத்துக்கு ஓகே கண்மணி என்று பெயர் வைக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

........................................................................................................
எமது தளத்தின் மூலம் சினிமா, அரசியல் மற்றும் இதர செய்திகளை உடனடியாக தெரிந்துகொள்வதற்கு இந்த page ஐ like செய்யுங்கள் நண்பர்களே!!!

...........................................................................................................

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top