விஜய்யின் கத்தி படத்திற்கு வந்த அதே பிரச்சனை தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு வந்துள்ளது. கத்தி படத்தை லைகா நிறுவனம் தயாரித்தால் இந்த படத்தை வெளியிட கூடாது என பல அமைப்புகள் படத்திற்கு எதிராக போர் கொடி தூக்கியது.
அதன் பிறகு கடைசி நேரத்தில் நேரத்தில் லைகா பெயரை எடுத்துவிட்டு படத்தை வெளியிட அனுமதிக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது ‘லிங்கா’ படத்திற்கு அதே போன்ற ஒரு டென்ஷன் உருவாகியுள்ளது
கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள படம் லிங்கா. இந்த படம் சூப்பர் ஸ்டாரின் பிறந்த நாளன்று உலகம் முழுதும் ரிலீஸாகவுள்ளது. லிங்கா படத்தின் தமிழக மற்றும் கேரள தியேட்டர்களில் வெளியிடும் உரிமையை வேந்தர் மூவீஸ் சுமார் 70 கோடி ரூபாய் கொடுத்து பெற்றுள்ளது.
தற்போது வரும் தகவலின்படி இந்த பணத்தின் பெரும்பங்கு லைகா நிறுவனம் ரகசியமாக கொடுத்துள்ளது என்றும், இதேபோல் இந்த படத்தில் கிடைக்கும் லாபத்தின் பெரும்பகுதி லைகா நிறுவனத்திற்கே போகும்படி ரகசிய ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதாகவும் ஒருசில ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றது. இதை சமூக வலைத்தளங்களிலும் ஒருசிலர் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இந்த தகவல் தற்போதுதான் தமிழர் அமைப்புகளுக்கு போய் சேர்ந்துள்ளது. எனவே இன்னும் இரண்டொரு நாட்களில் இதுகுறித்து என்ன நடவடிக்கை எடுப்பார்கள் என்று தெரிய வரும் என்று நம்பதகுந்த வட்டாரங்களிலிருந்து தகவல் வெளியாகியுள்ளது. என்ன நடக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.