↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad துள்ளுவதோ இளமை ஷெரீனை தமிழ் ரசிகர்கள் அத்தனை எளிதில் மறந்து விட முடியாது. முதல்படத்திலேயே நாயகன் தனுஷ் தன்னை 
கற்பழித்து விடுவது போன்று துணிச்சலாக நடித்தவர். இப்படியொரு இமேஜ் முதல் படத்திலேயே ஏற்பட்டு விட்டால் அதன்பிறகு சினிமாவில் பெரிதாக வளர முடியாது என்று சிலர் முட்டுக்கட்டைப்போட்டும் அந்த படத்தில் நடித்தார் ஷெரீன்.

அந்த படமும் வெற்றியாக அமைந்ததால், அதையடுத்து தமிழில் பேசப்படும் நடிகையாக சில ஆண்டுகள் திகழ்ந்தார். சிபிராஜ் அறிமுகமான ஸ்டுடன்ட் நம்பர்-1, பீமா, பூவா தலையா என நடித்தவர் பின்னர் படவாய்ப்பு இல்லாமல் கன்னடத்துக்கு சென்று விட்டார். இருப்பினும் அவ்வப்போது கோடம்பாக்தக்துக்க வந்து கல்லெறிந்து வந்த ஷெரீனுக்கு இப்போது திகில், நண்பேன்டா என்ற இரண்டு படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.
இதில், திகில் படத்தில் ஒரு மிரட்டலான ரோலில் நடித்திருக்கிறாராம் ஷெரீன். இந்த படத்தின் ஆடியோ வெளியீடு நேற்று சென்னையில் நடைபெற்றது. படத்தின் நாயகன் அசோக் உள்பட அனைத்து டெக்னீசியன்களும் ஆஜராகியிருந்தனர். ஆனால், முக்கிய வேடத்தில் நடித்திருக்கும் ஷெரீன் மட்டும் ஆப்சென்டாகியிருந்தார்.


.......................................................................................................
எமது தளத்தின் மூலம் சினிமா, அரசியல் மற்றும் இதர செய்திகளை உடனடியாக தெரிந்துகொள்வதற்கு இந்த page ஐ like செய்யுங்கள் நண்பர்களே!!!

...........................................................................................................

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top