↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
தூண்டுதல்.. இது இல்லாமல் எந்தக் காரியமும்.. நடக்காது.. காமத்திலும் கூட இந்த தூண்டுதலுக்கு நிறையவே வேலை உண்டு, முக்கியத்துவம் உண்டு.
உடல் ரீதியான உறவுகளுக்கு வாய்ப்பில்லாத நேரத்தில் இதுபோன்ற இன்பத் தூண்டுதல்களும், தீண்டுதல்களும்தான் மனசை சொக்க வைக்கும், உற்சாகப்படுத்தி புத்துணர்வு பெற வைக்கும்.
உடல் ரீதியான சேர்க்கை இல்லாமலேயே கூட அந்த இன்ப உணர்வை இந்த தூண்டல்களும், தீண்டல்களும் நமக்குக் கொடுக்கும். சின்னச் சின்ன சில்மிஷங்கள், உராய்தல்கள், உடல் தொடாமல் உள்ளத்தைத் தொட்டு துவள வைக்கும் இன்பத் தீண்டல்கள்.. உண்மையிலேயே ரசித்து ரசித்து சந்தோஷப்பட வைக்கும் அம்சங்கள் – காதல் கலையில், காம விளையாட்டில்.

ஆண்களுக்கு சீக்கிரம்
ஆண்களுக்கு சீக்கிரமே காமத் தூண்டல் ஏற்பட்டு விடும். ஆனால் பெண்கள் உணர்வு பெற்று, உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை உச்சம் பெற நேரம் பிடிக்கும். அதை முழுமையாகக் கொண்டு வர வேண்டியது ஆண் மகனின் முக்கிய வேலை.

எல்லோருக்கும் ஒன்றுதான்
ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி இருவருக்குமே ஒரே மாதிரியான உணர்வுகள்தான் கிளர்ந்தெழும். ஆனால் எழுச்சி பெறும் நேரம்தான் வித்தியாசப்படும்.

லேசாக தட்டினாலே….
ஆண்களுக்கு லேசாக உணர்வுகள் தொடப்பட்டாலே போதும் உச்சத்திற்குப் போய் விடுவார்கள். ஆனால் பெண்கள் அப்படி இல்லை.. வீணை போல.. மீட்டும் விதத்தில் மீட்டினால்தான் நாதம் வெளிக்கிளம்பும்.. இன்பம் கூட்டும்.
உதடுகளால் தீண்டுங்கள்
பெண்களின் உணர்வுகளைத் தூண்டி விட, நிறைய செய்யலாம். அதில் ஒன்றுதான் இந்த உதட்டு விளையாட்டு. முன் விளையாட்டுக்களில் இந்த உதடு விளையாட்டுக்கு நிறைய பலன் கிடைக்கும். உதடுகளால் உடல் முழுவதும் தீண்டலாம்.. நெற்றி தொட்டு.. மெல்ல இமைகளில் புகுந்து, காதுகளில் நுழைந்து, காது மடல்களை நனைத்து, கழுத்தை அரவணைத்து, கன்னத்தைக் கடித்து, நாசியில் நடமிட்டு.. உதடுகளில் கொண்டு வந்து நிறுத்துங்கள் உங்கள் இதழ்களை…. இதழியல் கலையில் இப்படி ஒரு இன்பமா என்பதை உணர்வீர்கள்.

முத்த மழையில் நனையுங்கள்
அடுத்து முத்த மழை.. மறுபடியும் மேலே இருந்து வரலாம்… சின்னச் சின்னதாக செல்லக் குரலில் பேசியபடி, கொஞ்சியபடி, முனுமுனுத்தபடி முத்தம் வைத்து வரலாம்.. ஒவ்வொரு இடத்திலும் சின்னச் சின்னதாக கவிதை வாசித்தபடி… காதல் மொழி பேசியடி.. காமக் குரலில் கிசுகிசுத்தபடி முத்தம் இடும்போது உள்ளுக்குள் அவரது உணர்வுகள் சத்தம் இடுவதை உணரலாம்.
விரலில் கதை எழுதும் நேரமிது….
அடுத்து விரல்கள்.. கேசம் கோதி விட்டு.. உள்ளுக்குள் மென்மையாக பிடித்திழுத்து.. கழுத்தில் கோலமிட்டு.. பின் கன்னத்தில் கோலம் வரைந்து… நாசியில் விளையாடி.. கண்களை மெல்லத் தடவி.. இதழ்களில் நடமிட்டு.. சின்னதாக பிடித்து விட்டு.. பின் கீழிறங்கி.. மெல்ல மெல்ல.. செல்லமாக விளையாடுங்கள்.. விரல்களின் போக்கு கூட கூட அவருக்குள் உணர்வுப் பெருக்கு வேகம் பிடிக்கும்.. அதி வேகம் பிடிக்கும்….ஆடிப் பெருக்கின்போது பொங்கி வரும் காவிரியப் போல!.
அங்கம் தொட்டு…
பெண்களின் உடம்பே ஒரு உணர்ச்சிக் குவியல்தான் என்றாலும், சில இடங்கள் உணர்ச்சி எரிமலைகளாகும். அங்கெல்லாம் சென்று அங்கத்தை பொங்கச் செய்து.. அதிரச் செய்யலாம் உணர்வுகளை.. தொட்டுப் பிடித்து விளையாடும் போது.. அவரது உடம்பு மட்டுமல்லாமல் மனசும், உணர்வுகளும் கூட மத்தளமாக மாறி உணர்ச்சிகள் கொட்டு முழக்கிடும்…
மர்ம தேசத்து மாயாஜாலம்
மர்மப் பகுதிகளில் தான் உண்மையான உணர்ச்சிக் குவியல் உறைந்து கிடக்கிறது. அந்த இடங்களில் செய்யும் விரல் வேலைகளும், முத்த மழையும், முனுமுனுப்பு பேச்சுக்களும் அவரது ஒட்டுமொத்த உணர்வுகளையும் தட்டி எழுப்பி உங்களை சுற்றி வளைத்து உல்லாசக் கடலுக்குள் இட்டுச் சென்று விடும்.. இதழ்களால் மர்மப் பகுதிகளில் முத்தமிடும்போது சுனாமியே தோற்றுப் போகும் அவரது உணர்ச்சி வேகத்தைப் பார்த்து.
இன்னும் என்ன தாமதம்.. இன்னும் சில மணி நேரங்களில் கவியப் போகிறது மாலை… வரப் போகிறது இரவு.. இப்போதே தயாராகுங்கள்… இனிய விளையாட்டுக்கு!
மேலும் செய்திகளை பார்வையிடங்கள்

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top