↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad தெற்கு டக்கோடாவில் ஒரு புகைப்படக்காரர், பூமியின் வளிமண்டலத்தை நோக்கி ஒரு விண்கற்கள் வேகமாக நெருங்கி வந்த 
வியக்கத்தக்க காட்சிகளை தனது கேமிராவில் படம்பிடித்துள்ளார். வெஸ் Eisenhauer என்ற புகைப்படக்காரர் தெற்கு டகோடாவில் கஸ்டர் என்ற இடத்தில் உள்ள காடுகளில் குடும்பத்துடன் விடுமுறைக்காக சென்றிருந்தபோது, பால்வெளி மண்டலத்தில் நடந்த ஒரு தெளிவான காட்சிகளை தனது கேமரா மூலம் இரவில் படம்பிடித்துள்ளார். 

வானத்தில் நம்பமுடியாத அளவிற்கு தெளிவாக மற்றும் எந்தவித ஒளி மாசும் இல்லாமல் இருந்ததால் எனது கேமராவை வெளியில் அமைத்து கிளிக் செய்துவிட்டு வீட்டிற்குள் சென்று சுமார் ஒரு மணி நேரத்திறகு பிறகு வந்து பார்த்தபோது இந்த காட்சிகள் படம்பிடிக்கப்பட்டது என்று வெஸ் கூறியுள்ளார். 



கண்சிமட்டும் நேரத்தில் ஒரு விண்கற்கள் பூமியை நோக்கி வேகமாக நகர்ந்து வந்து, தீடிரென வெடித்து சிதறியது. இந்த நிகழ்வின்போது, வளையத்துக்குள் தூசியை போன்ற ஃபிளாஷ் அடிப்பதுபோல் வானத்தில் தோன்றியது. விண்கற்கள் வெடிக்கும்போது வினாடிக்கு 50 மைல்கள் வேகத்தில் பயணம் செய்யக்கூடியது. மேலும் நான் இந்த மாதிரியான ஒரு அரிய வகை புகைப்படங்களை பார்த்ததில்லை என்றும் கூறியுள்ளார். பிறகு நான், விண்கற்கள் கண்டுபிடிக்கப்பட்ட அரிய புகைப்படத்தை அனைவரும் பார்க்க வேண்டும் என்று வலைப்பதிவில் பதிவேற்றம் செய்தேன் என்றும் வெஸ் கூறியுள்ளார். 



0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top