↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

நடிகை நயன்தாரா தனது பிறந்தநாளை மாலத்தீவில் இன்று கேக் வெட்டி கொண்டாடினார். அவரது முன்னாள் காதலர் ந்டிகர் சிம்பு அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார்.
நயன்தாரா ‘மனசினகாரே’ எனும் மலையாள படம் மூலம் திரையுலகிற்கு வந்தார். தமிழில் ‘ஐயா’ படம் மூலம் 2005ஆம் ஆண்டு அறிமுகமானார். அடுத்து ‘சந்திரமுகி’ படத்தில் ரஜினிக்கு ஜோடியாகி பிரபலமானார். தொடர்ந்து சூர்யாவுடன் ‘கஜினி’, சிம்புவுடன் ‘வல்லவன்’, ஜீவாவுடன் ‘ஈ ’, அஜித்துடன் ‘பில்லா’, விஜய்யுடன் ‘வில்லு’, தனுஷுடன் ‘யாரடி நீ மோகினி’,விஷாலுடன் ‘சத்யம்’, ஆர்யாவுடன் ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’ என முன்னணி நட்சத்திரங்கள் பலருக்கும் ஜோடியாக நடித்தார்.
இடையில், நடிகர் சிம்புவுடனும், பின்னர் பிரபுதேவாவுடனும் காதல் சூறாவளியில் சிக்கிய இவர், அதிலிருந்து வெளியேறி மீண்டும் நடிக்க வந்தார். தனது இரண்டாவது இன்னிங்ஸில் ‘ராஜா ராணி’, ‘ஆரம்பம்’ எனஅடுத்தடுத்து இரண்டு வெற்றிப் படங்களை கொடுத்து, விட்ட இடத்தை பிடித்தார். தற்போது சிம்புவுடன் ‘இது நம்ம ஆளு’, உதயநிதியுடன் ‘நண்பேன்டா’, ஜெயம் ரவியுடன் ‘தனி ஒருவன்’, சூர்யாவுடன் ‘மாஸ்’ என ரவுண்டுகட்டி அடிக்கிறார் நயன்தாரா. இது தவிர மலையாளம் மற்றும் தெலுங்கிலும் நடித்து வருகிறார்.
இந்நிலையில். நயன்தாரா தனது பிறந்த நாளை மாலத்தீவில் இன்று (நவம்பர் 18) கேக் வெட்டி கொண்டாடினார். இதற்காகவே இரண்டு தினங்களுக்கு முன்பு குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய தோழிகளுடன் அவர் மாலத்தீவு சென்றார்.
...........................................................................................................
எமது தளத்தின் மூலம் சினிமா, அரசியல் மற்றும் இதர செய்திகளை உடனடியாக தெரிந்துகொள்வதற்கு இந்த page ஐ like செய்யுங்கள் நண்பர்களே!!!

மாலத்தீவில் பிறந்தநாள் கொண்டாடிய நயன்தாராவுக்கு அவரது முன்னாள் காதலரும், இந்நாள் “பார்ட்டி சினேகிதருமான” நடிகர் சிம்பு அலைபேசியில் தொடர்பு கொண்டு, பிறந்தநாள் வாழ்த்து கூறினார். இதுபோல் ஆர்யா உள்ளிட்ட ஏராளமான திரையுலகத்தினர் வாழ்த்து தெரிவித்தார்கள்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top