↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

பிரதமர் நரேந்திர மோடியின் தூய்மை இந்தியா திட்டத்தில் பல நடிகர், நடிகைகள் பலர் இணைந்து வருகின்றனர்.
நடிகர் கமல் அவரது பிறந்த நாளன்று மாடம்பாக்கம் ஏரியை சுத்தம் செய்தார். இதில் அவரது ரசிகர்களும் பங்கேற்றனர். ஏரி கரையோரம் கிடந்த குப்பைகளை அப்புறப்படுத்தினார். நடிகை தமன்னாவும் மும்பை பகுதியை சுத்தப்படுத்தினார்.
அதன் பிறகு சமந்தா ஐதராபாத்தில் உள்ள அரசு பள்ளிக்கு சென்று பள்ளி வளாகத்தில் குவிந்திருந்த குப்பைகளை சுத்தம் செய்தார். சுத்தம் செய்த பிறகு த்ரிஷாவும் இந்த தூய்மை இந்தியா திட்டத்தில் இணையுமாறு அழைப்பு விடுத்தார் சமந்தா. தெலுங்கு நடிகர் நாகார்ஜூனாவும் மனைவி அமலாவுடன் இணைந்து துடைப்பம் ஏந்தி தெருக்களில் குப்பைகளை கூட்டி சுத்தம் செய்தார்.
தெலுங்கு நடிகர் மோகன்பாபுவும் தூய்மை இந்தியா திட்டத்தில் இணைந்தார். அவருடன் ஏராளமான ரசிகர்களும் சேர்ந்து குப்பை அள்ளினார்கள். மோகன்பாபுவின் மகன் விஷ்ணு, மகள் லட்சுமி மஞ்சு பழைய நடிகை சுமலதா ஆகியோரும் இணைந்து குப்பை அள்ளினார்கள். மோகன் பாபு, ரஜினியை தூய்மை இந்தியா திட்டத்தில் இணையுமாறு அழைப்பு விடுத்துள்ளார். ரஜினியும் மோகன்பாபுவும் நெருங்கிய நண்பர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
............................................................................................................
எமது தளத்தின் மூலம் சினிமா, அரசியல் மற்றும் இதர செய்திகளை உடனடியாக தெரிந்துகொள்வதற்கு இந்த page ஐ like செய்யுங்கள் நண்பர்களே!!!

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top