↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

நடிகர் சங்கம் பிரச்சனை தற்போது மிகவும் உச்சத்தை அடைந்துள்ளது. நடிகர் சங்கத்தை பற்றி அவதூறு செய்தியை பரப்பினால் விஷாலை நடிகர் சங்கத்திலிருந்து நீக்கி விடுவோம் என்று சரத்குமார் கூறியிருந்தார்.
இதற்கு உடனடியாக பதில் தெரிவித்துள்ளார் நடிகர் விஷால். இது குறித்து தனது அறிக்கையில், “சங்கத் தலைவர் சரத்குமாரிடமிருந்து இப்படி ஒரு பேச்சைக் கேட்டு நான் அதிர்ச்சியடைந்தேன். நடிகர் சங்கத்தின் ஒவ்வொரு உறுப்பினரையும் மதிக்கிறேன். அவர்கள் என்னை வெளியேற்றினால் அந்த முடிவை ஏற்றுக்கொள்ளவும் தயாராக இருக்கிறேன். ஆனால், நீக்குவதற்கு முன் நான் சங்கத்துக்கு எதிராக என்ன மாதிரியான நடவடிக்கைகளில் ஈடுபட்டேன் என்பதற்கான ஆதாரத்தை சரத்குமார் காட்ட வேண்டும்.
சங்கத்தின் செயலாளர் ராதாரவியும், துணைத் தலைவர் காளையும் சங்க உறுப்பினர்களை தரக்குறைவாக, அதிலும் ‘நாய்கள்’ என்று பேசிய பேச்சுகள் என் உணர்வுகளைப் புண்படுத்திவிட்டன. சங்க விதி 13-ன்படி சங்க உறுப்பினர்களைக் காயப்படுத்தும் விதமாகப் பேசுபவர்கள் மீது, நடவடிக்கை எடுக்கலாம். அதன்படி முன்பு அப்படிப் பேசிய சீனியர் நடிகர் குமரிமுத்து மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு அவர் சங்கத்திலிருந்து விலக்கி வைக்கப்பட்டார்.
இப்போது ராதாரவியும், காளையும் அப்படிப்பட நடவடிக்கைக்கு உரியவர்கள்தான். நீதி என்பது அனைவருக்கும் பொதுவானதுதானே. எனவே அவர்கள் இருவர் மீதும் நடவடிக்கை எடுத்து, ராதாரவியும், காளையும் விலக்குங்கள்,” என்று கூறியுள்ளார். இப்போது நெருக்கடி சரத்குமாருக்குதான்.
............................................................................................................
எமது தளத்தின் மூலம் சினிமா, அரசியல் மற்றும் இதர செய்திகளை உடனடியாக தெரிந்துகொள்வதற்கு இந்த page ஐ like செய்யுங்கள் நண்பர்களே!!!

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top