அமுதமேயானாலும் அள்ளி குடித்தால் அலுக்கதான் செய்யும். சொகுசாக மரத்தை சுற்றி டூயட் பாடும் நடிகைகளுக்கு ஒருகட்டத்தில் கத்தியை சுழற்றணும், குதிரையில் பறக்கணும், வில்லன்களை துவைக்கணும் என்று விபரீத ஆசை ஏற்படுவது இயல்புதான். அதுவும் சக நடிகையொருவர் இதையெல்லாம் செய்து கொண்டிருக்கையில் மற்றவர்களின் கையும் காலும் பரபரக்கதான் செய்யும்.
பாகுபலி, ருத்ரம்மாதேவி படங்களில் அனுஷ்கா சண்டைக் காட்சிகளில் அசத்தி வருகிறார். அவரைப் போல வருமா என்று இரு பட இயக்குனர்களும் நற்சான்றிதழாக தந்து கொண்டிருக்கிறார்கள். சமந்தாவுக்கும் அனுஷ்கா மாதிரி சண்டையிட வேண்டும் என்று ஆசை.
பல படங்களில் நடித்திருந்தாலும் அஞ்சானில்தான் சமந்தா கவர்ச்சி பிரதேசத்திலேயே காலடி வைத்தார். அதற்குள் ஆக்ஷன் ப்ளாக்குக்கு ஆசைப்படுவது ஆச்சரியம்தான். ஆனால், முன்னணி நடிகையாச்சே. விரும்பியது கிடைத்திருக்கிறது.
சமந்தா அடுத்தப் படத்தில் அனுஷ்கா மாதிரியே சண்டையிடப் போகிறாராம். அதற்குதான் அவர் குதிரை சவாரி பயிற்சி எடுத்துக் கொண்டிருக்கிறார். நல்லா குதிரை ஏறுங்க என்று த்ரிஷாவும் ட்விட்டரில் சமந்தாவை வாழ்த்தியிருந்தார். அடிதடிகலை அறுபத்தி நான்கையும் படிக்க முடியாவிட்டாலும் நான்கைந்தையாவது பயிற்சி செய்து பார்த்துவிடுவது என்று கச்சைகட்டி இறங்கியிருக்கிறார்.
அடிபடப் போகிற வில்லன்களை நினைச்சா பொறாமையா... ஸாரி, கவலையா இருக்கு.
...........................................................................................................
எமது தளத்தின் மூலம் சினிமா, அரசியல் மற்றும் இதர செய்திகளை உடனடியாக தெரிந்துகொள்வதற்கு இந்த page ஐ like செய்யுங்கள் நண்பர்களே!!!
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.