↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

சசி தரூர் மனைவி சுனந்தா புஷ்கர் மரணம் தொடர்பாக நீதிமன்றம் கண்காணிப்பில் விசாரணை நடத்த வலியுறுத்தி எனது தரப்பில் பொதுநல மனு தாக்கல் செய்யப்படலாம் என்று பாரதீய ஜனதா கட்சியின் தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியன் சாமி தெரிவித்துள்ளார்.
நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட சுப்பிரமணியன் சாமி, சுனந்தா புஷ்கர் மரணம் தொடர்பாக செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளிக்கையில், சுனந்தா புஷ்கார் மரணம் தொடர்பான விடயத்தில், நான் ஒரு முழுமையான விசாரணை கேட்டு நீதிமன்றத்தில் பொதுநல மனுவை தாக்கல் செய்யலாம் என்று கூறினார்.

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி காலத்தில் பல சந்தர்ப்பங்களில் நீதிமன்றம் தலையிட வேண்டும் என்று நான் கேட்டுக் கொண்டேன், ஆனால் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சிக்கு வந்த பிறகு எந்த விஷயத்திலும் நீதிமன்றம் செல்லவில்லை.

இருப்பினும், சுனந்தா புஷ்கர் மரணம் தொடர்பாக நான் நீதிமன்றத்தில் பொதுநல மனுவை தாக்கல் செய்யலாம் என்று குறிப்பிட்டுள்ளார்.

சுனந்தா புஷ்கர் மரணம் தொடர்பாக சிறப்பு விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று சுப்பிரமணியன் சாமி நீண்ட நாட்களாக வலியுறுத்தி வருகிறார்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top