சிம்பு இந்த பெயர கேட்டாலே பல இயக்குனர்கள் அலகு குத்துவது போல அலறியடித்துக்கொண்டு ஓடுவார்கள், மனுஷன் 3 வருஷமா ஒரு படத்தையும் முழுசாக முடிக்கல இன்னும். ஆனா அடுத்தடுத்து பல படங்களில் கையெழுத்திடுகிறார்.
கையெழுத்து மட்டும் தான் போடுறாரு படம் ஆரம்பம் ஆக மாட்டிங்குது, அப்படியே ஆனாலும் முடிய மாட்டிங்குது அது வேற பிரச்சனை நம்ம விஷத்துக்கு வருவோம். என்னை அறிந்தால் படத்திற்கு முன்பு ஆரம்பிக்கப்பட்ட சிம்பு, கௌதம் மேனன் படத்திற்கு அச்சம் என்பது மடமையடா என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.
அஜித்தின் கால்ஷீட் கிடைக்கவும், அவரை உடனே இயக்க சென்றுவிட்ட கௌதம் மேனன் தற்போது மீண்டும் சிம்பு படத்தின் படபிடிப்பை ஆரம்பித்துள்ளார். இந்த படத்தின் படபிடிப்பில் 90 சதவிகிதத்தை ஒரே ஷெட்யூலில் முடிக்க திட்டமிட்டுள்ளார்களாம். (இந்த விஷயம் சிம்புவுக்கு தெரியுமா..?)
அச்சம் என்பது மடமையடா படத்திற்கு ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரகுமான் இசை அமைக்கிறார்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.