↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

கடந்த 90களில் கோலிவுட்டின் முன்னணி நாயகியாக வலம் வந்த பிரபல நடிகை சிம்ரன், சமீபத்தில் தயாரிப்பு நிறுவனம் ஒன்றை ஆரம்பித்து அதன்மூலம் படங்களை தயாரிக்கவுள்ளதாக வந்த செய்தியை பார்த்தோம். மேலும் அவரே ஒருசில படங்களை இயக்குவார் என்றும் கூறப்பட்டது. இந்நிலையில் சிம்ரன் தற்போது தயாராகி வரும் ஒரு படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

தமிழ், தெலுங்கு, கன்னடம் என மூன்று மொழிகளில் தயாராகி வரும் திரைப்படம் 'கரையோரம். இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க சிம்ரன் ஐந்து நாட்கள் கால்ஷீட் கொடுத்திருப்பதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். நிகிஷா பட்டேல் மற்றும் வசிஷ்டா சிம்ஹா நடித்து வரும் இந்த படத்தில் நடிகை இனியா நெகட்டிவ் ரோலில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

சிம்ரன் ஏற்கனவே ஜி.வி.பிரகாஷ்குமார் நடித்து வரும் 'த்ரிஷா இல்லைன்னா நயன்தாரா' என்ற படத்திலும் சிறப்பு தோற்றத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. கடற்கரை கரையோரம் உள்ள பங்களாவில் நடைபெறும் திகில் சம்பவங்களை அடிப்படையாக வைத்து தயாரிக்கப்பட்டு வரும் இந்த படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு முடிவடைந்து விட்டதாகவும், திகில் மற்றும் சஸ்பென்ஸ் படமாக உருவாகியுள்ள இந்த படம் விரைவில் வெளிவர இருப்பதாகவும் படகுழுவினர் தெரிவித்தனர்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top