↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
அருந்ததியைத் தொடர்ந்து அனுஷ்கா நடித்துள்ள பிரமாண்ட படம் ராணி ருத்ரம்மா தேவி. தமிழ்நாட்டு ஜான்சிராணி போன்று ஆந்திராவில் 
ராணியாக வாழ்ந்தவர்தான் இந்த ருத்ரம்மா தேவி. அவரது வாழ்க்கை கதை என்பதால், அவரைப்போன்ற கெட்டப்புக்கு மாறி நடித்துள்ளார் அனுஷ்கா. முக்கியமாக குதிரையேற்றம், வாள் சண்டை என்றெல்லாம் புகுந்து விளையாடியிருக்கிறார்.

இந்த நிலையில், தமிழில் விஜய் நடித்து வரும் புலி படத்துக்காக இளவரசி ரோலில் நடிக்கிறார் ஹன்சிகா. இந்த வேடத்தில் அவருக்கு வாள் சண்டை போடும் காட்சிகளும் உள்ளதாம். அதனால் ஒரு பயிற்சியாளரை வைத்து சில நாட்கள் தீவிரமான பயிற்சி எடுத்தாராம். அப்போது, அந்த வாளை தூக்கவே ரொம்ப கஷ்டப்பட்டாராம் ஹன்சிகா.

அதோடு, அதை கையில் பிடித்து சுழற்றியபடி பயிற்சி எடுத்தபோது அவரது கை விரல்கள், மணிக்கட்டு போன்ற பகுதிகளில் அதிக வலி ஏற்பட்டதாம். இதனால் முதல் நாள் பயிற்சிக்கு பிறகு இரண்டு நாள் லீவு போட்டு விட்டாராம் ஹன்சிகா. ஆக, பயிற்சியே அவருக்கு பெரிய விஷப்பரீட்சையாக இருந்திருக்கிறது. 

அப்போது, எனக்கு இந்த படத்தில் வாள் சண்டை போடுவது போன்று ஒரு சிறிய காட்சிதான் உளளது. ஆனால், ராணி ருத்ரம்மா தேவி படம் முழுக்க வாள் சண்டை போட்டபடி நடித்திருக்கிறாரே அனுஷ்கா, அதற்காக அவர் எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பார். ரியலி அனுஷ்கா கிரேட்தான் என்று தனது வியப்பினை வெளிப்படுத்தினாராம் ஹன்சிகா.

0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top