↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

சிபிராஜ், அருந்ததி, பாலாஜி நடிப்பில் தரண்குமார் இசையில் சக்தி சவுந்தர்ராஜன் இயக்கத்தில் நடிகர் சத்யராஜின் நாதம்மாள் பிலிம் பாக்டரி தயாரிப்பில் உருவாகியுள்ள படம் நாய்கள் ஜாக்கிரதை. இந்த படத்தில் இதோ எனும் ஒரு நாய் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளது.
கிட்டத்தட்ட நான்கு வருட இடைவெளிக்கு பிறகு சிபிராஜ் நடிப்பில் வெளிவரும் இந்த படத்தை விஜய்யின் நண்பன், துப்பாக்கி மற்றும் சமீபத்தில் வெளியான கத்தி படத்தை கோயமுத்தூரில் வெளியிட்ட காஸ்மோ வில்லேஜ் என்ற நிறுவனம் தமிழ்நாடு முழுதுவம் சுமார் 230க்கும் மேற்ப்பட்ட திரையரங்குகளில் வெளியிடுகிறது.
இதற்கு முன்பு சிபிராஜ் நடித்த எந்த படமும் இத்தனை திரையரங்குகளில் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது, அதோடு இந்த படத்தின் பெயர் தான் நாய்கள் ஜாக்கிரதை என்று வைக்கப்பட்டிருக்கிறது, ஆனால் கதைக்களமானது படத்தின் கதாநாயகி அருந்ததி வாழ்கையில் ஏற்படும் பிரச்சனைகளை மையப்படுத்தி எடுக்கபட்டுள்ளது என்று படத்தின் இயக்குனர் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக நாய்களை பிரியமாக வளர்பவர்களுக்கு இந்த படம் கட்டாயம் மிகுந்த சந்தோஷத்தை தரும் என்றும், நாயகளை பிடிக்காதவர்கள் இந்த படத்தை பார்த்தால் கட்டாயம் ஒரு நாய்யை வாங்கி வளர்ப்பார்கள் என்று படத்தின் இசையமைப்பாளர் தருண்குமார் தெரிவித்துள்ளார்.
வரும் 21ம் தேதி நாய்கள் ஜாக்கிரதை படம் உலகம் முழுவதும் வெளியாகிறது.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top