↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

உதவி இயக்குநராக இருந்த ஏ.ஆர்.முருகதாஸுக்கு ‘தினா’ படத்தின் மூலம் வாழ்க்கை கொடுத்தவர் அஜித்.

அதிலிருந்து  ஏ.ஆர்.முருகதாஸோ அடுத்தடுத்த படங்கள் மூலம் பிஸியான இயக்குநராகி பாலிவுட்டிலும் பிரபலமாகும் அளவுக்கு வளர்ந்தார். அஜித்தும் முன்னணி ஹீரோவானார். அந்தப் படத்துக்குப் பிறகு அஜித்துடன் ஏ.ஆர்.முருகதாஸ் வேறு எந்தப் படத்திலும் இணையவில்லை. ஆனால் மீண்டும் அஜித்துடன் இணைந்து பணியாற்ற ஆசை என்று மட்டும் அடிக்கடி சொல்லி வந்தார்.

இந்த நிலையில் தான் கத்தி படத்தின் ஸ்டோரி ஏ.ஆர்.முருகதாஸின் சொந்த மூளையா அல்லது மீஞ்சூர் கோபியிடமிருந்து திருடப்பட்ட மூளையா என்கிற சர்ச்சை கிளம்பியது. இன்னும் அதன் சூடு ஆறவில்லை. அதற்குள் அடுத்த சர்ச்சையை கிளப்பி விட்டுருக்கிறார்கள் ஏ.ஆர்.முருகதாஸ் வட்டாரம். இன்று திடீரென்று ”ஏ.ஆர்.முருகதாஸின் அடுத்த படத்தில் அஜித் நடிக்கப் போகிறார்” என்று அவர் தரப்பிலிருந்தே அதிகாரப்பூர்வமான செய்தி வெளியானது.

அந்தச் செய்தி மீடியாக்களில் பரவ ஆரம்பித்த சில நிமிடங்களில், அது முற்றிலும் பொய்யான செய்தி என்கிற விபரம் தெரிய வந்தது. காரணம், இப்படி ஒரு படத்தில் இணைவது சம்பந்தமாக அஜித்தும், ஏ.ஆர்.முருகதாஸும் சந்தித்து பேசவே இல்லை. ஆனால் இப்படி ஒரு செய்தியை மீடியாக்களுக்கு வேண்டுமென்றே பரவ விட்டிருக்கிறது ஏ.ஆர்.முருகதாஸ் வட்டாரம். இந்த விஷயத்தைக் கேள்விப்பட்டதும் அஜித் ரொம்பவே அப்செட்டாகி விட்டாராம்.


அதோடு ‘கத்தி’ கதைச் சர்ச்சையிலும் தேவையில்லாமல் தன்னுடைய பெயரைச் சொல்லி மீஞ்சூர் கோபியை ஏமாற்றியது அஜித்துக்கு ரொம்பவே வருத்தத்தை கொடுத்திருக்கிறது. அந்த வருத்தம் தான் ”ஏ.ஆர்.முருகதாஸ் படங்களில் நடிக்கப் போவதில்லை” என்கிற அதிரடி முடிவை அஜித்தை எடுக்க வைத்ததாம். இந்த அதிரடி முடிவு இப்போதைக்கு மட்டும் தானா? அல்லது இனி எக்காலத்துக்கும் இல்லையா? என்பது இனி ஏ.ஆர்.முருகதாஸ் நடவடிக்கைகளைப் பொறுத்துத் தான் அமையும்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top