↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

மருதநாயகம் படத்தை எந்த நேரத்திலும் தொடங்குவேன் எனக் கூறியுள்ளார் கமல் ஹாசன். இது பற்றி அவர் கூறியதாவது: என்னுடைய பலம் உண்மையாக இருப்பது. தவறு செய்தால் மண்டியிட்டு மன்னிப்பு கேட்டுவிடுவேன். இதுதான் என்னை சொந்த காலில் நிற்க வைக்கிறது. உண்மையாக இருப்பது சிறந்த கொள்கை என்பார்கள். என்னைப் பொறுத்தவரை அது சிறந்த பொக்கிஷம். அதுதான் எனக்கு தேவையானதும்.
தற்போது நடித்து வரும் படங்களில் உத்தம வில்லன் முதலில் முடிவடையும். யார் முதலில் பணம் தருகிறார்களோ அந்த படம்தான் முதலில் வெளிவரவேண்டும் என்பது கோலிவுட்டில் விதி. ஆனால் எதிர்பாராதவிதமாக விஸ்வரூபம் 2 படத்தின் கிராபிக்ஸ் பணிகள் பாக்கி இருக்கிறது. இது எங்கள் தவறு அல்ல. இப்போதைய நிலவரப்படி உத்தம வில்லன், பாபநாசம், விஸ்வரூபம் 2 என்ற வரிசையில் ரிலீஸ் ஆகும்.
‘மருதநாயகம் தொடங்குவது எப்போது என்கிறார்கள். எந்த நேரத்திலும் அதை தொடங்குவேன். ஏற்கனவே 30 நிமிடம் படம் தயாராக இருக்கிறது. இன்னும் 2 மணி நேரத்துக்கான காட்சிகள் அமைக்க வேண்டி உள்ளது.இவ்வாறு கமல் கூறினார்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top