↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

ராவணன் போல் இந்திய அணித்தலைவர் டோனியின் கதை முடியும் என யுவராஜ்சிங்கின் தந்தை யோகராஜ்சிங் கூறியுள்ளார்.
2015ம் ஆண்டு உலகக்கிண்ண போட்டியில் யுவராஜ் சிங் இடம்பெறாததற்கு டோனி தான் காரணம் என்று யோகராஜ்சிங் குற்றம்சாட்டியிருந்தார்.
இந்நிலையில், இந்தி தொலைக்காட்சி ஒன்றுக்கு யோகராஜ்சிங் அளித்துள்ள பேட்டியில்,டோனி ஒன்றும் பெரிய வீரர் கிடையாது. டோனியை போற்றி புகழும் ஊடகங்களுடன் அவர் நன்றாக பழகிவருகிறார்.
டோனி ஒரு சர்வாதிகாரி. ராவணனின் கதை முடிந்தது போல ஒருநாள் டோனியின் கதையும் முடிவடையும். ஆனால் டோனி ராவணனுக்கும் மேல் என்றும் ஒருநாள் காசின்றி பிச்சை எடுக்கும் நிலைக்கு அவர் தள்ளப்படுவார் எனவும் விமர்சித்துள்ளார்.
2011ஆம் ஆண்டு உலகக்கிண்ண இறுதி ஆட்டத்தில், இலங்கை அணிக்கு எதிராக எனது மகன்தான் 4வது வீரராக களமிறங்க சென்றான். அதை தடுத்த டோனி களமிறங்கி ஒரு ஹீரோவாக தன்னை காட்டிக்கொண்டார். தன்னை ஒரு மிகப்பெரிய ஜாம்பவனாக கருதும் அவர், நடந்து முடிந்த உலகக்கிண்ண அரையிறுதி ஆட்டத்தில் அவுஸ்திரேலிய அணிக்கு எதிராக ஏன் வெற்றி தேடி தர முடியவில்லை? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top