ஐ.பி.எல் தொடக்கவிழாவில் கலந்து கொள்ளவதற்காக கிரிக்கெட் வீராட் கோஹ்லி தனது காதலியுடன் ஜோடியாக சென்றுள்ளார்.
8-வது ஐ.பி.எல். போட்டி நாளை (புதன்கிழமை) தொடங்குகிறது. மே மாதம் 24- ஆம் திகதி வரை 47 நாட்கள் இந்த கிரிக்கெட் போட்டி நடக்கவிருக்கிறது.
சென்னை, மும்பை, கொல்கத்தா, பெங்களூர், ஐதராபாத், டெல்லி உள்பட 12 மைதானங்களில் இந்த போட்டி நடக்கவிருக்கிறது.
நாளை நடைபெறும் தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான காம்பீர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ்-ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன.
பிரமிப்பூட்டும் வகையில் நடத்தப்படும் தொடக்க விழாவில் இந்தி நடிகையும், இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லியின் காதலியுமான அனுஷ்கா சர்மா, இந்திப்பட நட்சத்திரங்கள் ஹிருத்திக் ரோஷன், சாகித் கபூர், பர்ஹான் அக்தர் ஆகியோரின் நடனத்துடன், இசை அமைப்பாளர் பிரித்தமும் கலக்க இருக்கிறார். இந்தி நடிகர் சயீப் அலி கான் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குகிறார்.
இதற்காக இன்று கொல்கத்தா டம் டம் விமான நிலையத்தில் வீராட் கோஹ்லி மற்றும் அனுஷ்கா சர்மா ஜோடியாக சென்றுள்ளனர்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.