↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad இந்திய டெஸ்ட் வீரர் செடேஷ்வர் புஜாரா ஐபிஎல் ஏலத்தில் புறக்கணிக்கப்பட்ட நிலையில், இங்கிலாந்தின் யார்க்‌ஷயர் அணிக்கு விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
புஜாரா இங்கிலாந்தில் கடந்த முறை நடைபெற்ற 5 டெஸ்ட் போட்டிகளில் 222 ஓட்டங்களை எடுத்திருந்தார்.
அதே போல் சமீபத்தில் நடந்து முடிந்த அவுஸ்திரேலிய தொடரில் 3 டெஸ்ட் போட்டிகளில் 201 ஓட்டங்களை எடுத்து ஓரளவு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தார்.
இந்நிலையில் புஜாராவுக்கு இங்கிலாந்தின் உள்ளூர் அணியான யார்க்‌ஷயரில் விளையாட வாய்ப்பு கிடைத்துள்ளது. இதை சிறப்பாக பயன்படுத்திக் கொள்ளப் போவதாக அவர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், ஐபிஎல் கிரிக்கெட்டில் ஏலம் எடுக்கப்படாதது பற்றி கவலையில்லை, தற்போது யார்க்‌ஷயர் அணிக்கு விளையாட வாய்ப்பு கிடைத்துள்ளது.
கிரிக்கெட் வாழ்வில் சில நேரம் நமக்கு சாதகமாக அமையாது. அதிலிருந்து வெளியே வர கடின உழைப்பு தேவை. எனது முன்னுரிமை தற்போது யார்க்‌ஷயர் அணிக்காக சிறப்பாக விளையாடுவதே.
கடந்த முறை டெர்பிஷயர் அணிக்காக விளையாடினேன், இந்த முறை யார்க்ஷயர் ஒப்பந்தம் கிடைத்துள்ளது.
இங்கிலாந்தின் பிட்ச், சூழலில் ஆடுவது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. பலதரப்பட்ட பிட்ச்களில் ஆடுவது ஒரு சிறந்த கற்றல் அனுபவமாகும்.
மேலும் சச்சின் டெண்டுல்கர் ஆடிய கவுண்டி அணியான யார்க்‌ஷயர் அணிக்கு விளையாடுவதை பெருமையாகக் கருதுகிறேன் என்று கூறியுள்ளார்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top